❤ 47 ❤

5.2K 233 118
                                    

இரவுக்கு நிலவாக
நீ தோன்றினாய்...
தரை இறங்காமல் தள்ளி நின்று
வாதம் செய்கின்றாய்
நான் போகும் வழி எல்லாம்
ஒளி வீசினாய்....
என் உலகெங்கும் அழகாக
நிறம் பூசினாய்..

அறை முழுவதும் தேடி களைத்துப்போய் ஒரு கண்ணை குளியலரைக்கதவிலும் மற்றைய கண்ணை.. வேறு எங்கே இருக்கும் என துலாவிக்கொண்டும் கட்டிலில் அமர்ந்து நகத்தைக்கடித்துத்துப்பிக்கொண்டிருந்தாள் சாரு.

குளியலருக்கதவு திறக்கும் சத்தம் கேட்க சட்டென படுத்து தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டாள்.

சக்தி அருகில் நடந்து வருவது தெரிய இருந்தும் பேசாமல் தூக்கம் போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள் சாரு. அருகில் நெருங்கி வந்த சக்தி மெதுவாய் போர்வையை விலக்கி அவள் முகத்தை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

சாருவோ கடினப்பட்டு மூச்சை இழுத்துப்பிடித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்மணிகள் மூடிய கண்களினுள் நடனமாடுவதைக்கண்டு கொண்ட சக்தி சிரித்துக்கொண்டே அவளை நெருங்கினான்.

அருகில் நெருங்கி நூலிடைவெளியில் வந்த சக்தி அப்போதுதான் குளித்து விட்டு வந்திருந்த தன் தலைமுடியை சிலுப்பிவிட தன் மேல் நீர்த்துளிகள் விழவும் பதறியவாறு கண்களைத்திறந்து பட்டென எழுந்தாள் சாரு. எழுந்த வேகத்தில் அருகில் நெருங்கியிருந்த சக்தியின் நெற்றியிலே இடித்துக்கொண்டாள்.

நெற்றியை தேய்த்துக்கொண்டே அவனை முறைத்தவளைப் பார்த்துவிட்டு மெதுவாக அறையை நோட்டமிட்ட சக்தி.."என்ன மேடம் வெடிகுண்டு தேடி ரொம்ப களைச்சி போய்ட்டீங்க போல.." அவன் நக்கலாய் கேட்கவும் பேசாமல் போர்த்திக்கொண்டு மறுபக்கம் திரும்பி படுத்தாள் சாரு.

சக்தியும் சிரித்து விட்டு இரவு உடைக்கு மாறி மற்றைய பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டான்.
கைகளை நீட்டி அவன் சோம்பல் முறித்து விட்டு தூங்க முயல்வதைக்கண்ட சாருவுக்கு சட்டென ஓர் எண்ணம் தோன்றியது.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)حيث تعيش القصص. اكتشف الآن