❤காற்றும் காதில்
உன் பெயர்
சொல்லிட..
இருளிலும் உன்
விம்பம் என்
விழிகளில்..
முடிவில்லா
மாயங்களின்
ஆரம்பமாய் நீ..❤"சதீஷ் என்னடா பன்ன போற?"
என பல முறை கிசுகிசுத்தவாறே அவனைப்பின்தொடந்தவள் பதில் கிடைக்காமல் போக சலிப்புடன் அவனை பிடித்து இழுக்க அதேநேரம், அவன் நேராய் மாடிப்படி ஏறிச்சென்று கடைசியாய் இருந்த அறைக்கதவை நெருங்கி பூட்டில் கை வைக்கவும் சரியாய் இருந்தது.."ஐயோ சதீஷ்..வேணான்டா"
என்று அலரியவாறே அவனை தடுத்தாள் நிலா."உஷ் சும்மா இரு.." அவளை அமைதிப்படுத்தி விட்டு அவன் தன் வேலையை பார்க்க..
"ஓய் அண்ணா ரூம்டா சதீஷ்..இங்க க்ளீன் பன்னவே உள்ள வர கூடாது..இதுல இப்போ எதுக்கு நீ உள்ள போற?" பயம் சந்தேகம் என பலதையும் கண்களில் தேக்கி அதோடே இதுக்காக இருக்குமோ என்ற எண்ணத்தையும் சேர்த்து சதீஷை பார்த்தாள் அவள்.
"தாங்கள் என்ன எண்ணுகிறீறோ அதுவே நான் உள்ளே நுழைவதன் காரணமும்.." கண்களை மூடி ஏதோ வரம் அளிப்பது போன்ற பாவனையில் கூறினான் அவன்.
"அண்ணா சைன்ன கொபி பன்ன போறியா?"
உறுதிப்படுத்திக்கொள்ள கண்கள் விரிய அவனிடம் கேட்டவளிடம்.."அதுவே" என்று அதே பாவனையில் கூறிவிட்டு மீண்டும் கதவைத்திறக்கப்போனான் சதீஷ்.
"டேய் டேய் இருடா..போய் சாமிக்கு ஒரு பூஜை பன்னிட்டே வந்து திறக்கலாம்."
மீண்டும் தடுத்தவாறே நிலா கூற.."நாம என்ன பேய் ரூம்முக்கா போறம். அதோட பூஜைக்கெல்லாம் இங்க நேரம் கொட்டி கிடக்குது பாரு. இன்னும் one hour la அவன் வந்திடுவான் நீ பேசாம வா." அலள் தலையில் தட்டி அமைதிப்படுத்தி விட்டு அவன் கதவின் கைப்பிடியைத்திருகி திறக்க..பாரமான கதவாக இருந்தாலும் இலகுவாஇ இடம் விட.. இடைவெளிவிட்ட கதவை பட்டென இழுத்து மூடினாள் நிலா..
YOU ARE READING
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)
Romanceசக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....