❤ 7 ❤

5.8K 219 70
                                    

காரிருள் வானில்
நிலா செய்திடும்
மாயம்..
உன் கனாவில்
உன் மதியாய்
நான் செய்கிறேனடா

வானம் இருளை விட்டு கரு நீலத்தில் வண்ணம் தீட்ட ஆரம்பிக்க அதில் வழமையாய் மனதை கொள்ளை கொண்டிடும் சாருவோ இன்று மகிழ்ச்சி ஒரு பக்கம் துக்கம் ஒரு பக்கம் என அறிய முடியா மனநிலையில் கைகளில் பைகளுடன் ஊர் மக்களிடம் விடைபெற்றுக்கொண்டிருந்தாள் தன் பயணத்திற்காய்.

அழக்கூடாது என கொண்ட உறுதியையும் தாண்டி கண்கள் குளமாகிட இருந்தும் புன்னகையோடு அனைவரிடமும் விடை பெற்றவள் பாலுவை நோக்கிட..அவன் அழுகையில் கண்கள் சிவக்க தலைகுனிந்து நின்று கொண்டிருந்தான். இவள் அவனருகே சென்று அவன் உயரத்திற்கு குனிந்து தலையை நிமிர்த்த..பாலு விம்மியவாரே

"அக்கா மன்னிச்சிடுக்கா நான் சாக்லேட்டு தரலன்னு தான் நீ சாக்கலேட்டு வாங்க எங்க எல்லாரையும் விட்டு போறியா..நான் உனக்கு இனிமே அண்ணா அனுப்புற எல்லாமே தந்துடுறேன்க்கா போகாதேயேன்."
அவன் பேச்சில் தன்னை மறந்து சில துளி கண்ணீரை கீழே விட்டவள் சட்டென சுதாரித்துக்கொண்டு..

"என்னடா பல்லு இது இப்பிடி அழுதுட்டு இருக்க..உனக்கு சபதம் விட்டேனே மறந்துட்டுதா பிரியாணி சாப்பிட வேணா அதா போறேன்..என்ன அக்கா சொல்லிட்டயே சரி உனக்கும் ஒரு பொட்டளம் இருக்கு பிரியாணி..அக்கா வந்துடுறேன்..அழ கூடாது..சரியா"
அவன் கண்ணை துடைத்துவிட்டு பெரிய ஐயாவிம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டவள்..காரில் ஏறப்போக..மீண்டும் திரும்பி ஒரு முறை தன் பெற்றோரை பார்த்து விட்டு வந்த அழுகையை  அடக்கியவாறு ஓர் கையசைப்புடன் ஏறிக்கொண்டாள்.

கார் போக ஆரம்பிக்க..ஊரே அவளை வழியனுப்பிட இனிதே ஆரம்பமானது அவள் பயணம்.

சோகமே உருவாய் கண்மூடி  அமர்ந்திருந்தாள். கார் பாதையில் ஒரு குழியில் விழுந்து தன்னை மீட்டிட தன்னை சூழ்ந்திருந்த அந்த இறுகிய நிலையில் இருந்து விடுபட்டாள் சாரு. அப்போதுதான் சுற்றி பார்க்க கார் நகர்வதே அப்போதுதான் அவள் கருத்தில் பதிந்தது. தனக்கு பிடித்த கார் தனது கனவுகளில் ஒன்று இந்த கார் பயணம்..எண்ணியவள் மனநிலை கொஞ்சம் கொஞ்சமாய் குதூகலமாய் மாற ஆரம்பிக்க..

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now