❤ 43 ❤

6.2K 255 205
                                    

உயிர் கொண்டு வராயோ
காத்திருந்தேன்..
என்னுயிரும் சேர்த்து
கொண்டு போனாய் ஏனோ..
இது உன் மாயங்கள்
வழி கொண்டு
தொடரும் வலிகளா..

"சக்தி என்னடா..நாம நெருங்கிட்டோம்.. சாருவ கண்டுபிடிச்சிடலாம்.. தைரியமா இரு.. அந்த வேலுக்கு அவ்வளோ பவர் எல்லாம் இல்ல பார்த்தேல்ல பொலிஸ் தட்டின இரண்டு தட்டுலயே எல்லாத்தையும் ஒலறிட்டான்..அவனால இனி சாருவுக்கு எந்த ப்ராப்ளமும் இருக்காது" வினோ பேசிக்கொண்டே இருக்க..இருந்தும் சக்தி கண்களை மூடிய நிலையிலே முகத்தில் வருத்தத்துடன் சாய்ந்திருந்தான்.

சக்தி என வினோ அவன் தோள் பற்ற கண்களைத்திறந்தவன்.."இல்ல வினோ இதுல இனி அவன் பிரச்சனை இல்ல அவன பற்றி தெரியும் அவன் பேசுற அளவுக்கு அவனுக்கு தைரியம் இல்லதான் " என்றான்.

"பின்ன.." வினோ கேள்வியாய் நோக்க குற்றவுணர்வில் தலை குனிந்தவன் நேற்று இரவு தான் வரும் போது சாருவின் தாய் கதைத்ததைப்பற்றி கூறத்தொடங்கினான்.

ஜுஸ் கொண்டு வந்தவன் வேலு நாளை காலை சாருவை திருமணம் செய்து கொள்ள திட்டம் போட்டு சாருவை கடத்தியதும்.. சக்திக்கு ஜுஸில் கலந்து கொடுக்க ஏதோ ஒரு வகையான மருந்தை கொடுத்து தனக்கு பணம் தந்ததும் பற்றி அவன் கூற அதை கேட்டதும் சக்திக்கு பயம் வரவில்லை காரணம் அவனுக்கு வேலு பற்றி தெரியும். அவனிற்கு துள்ளல் மட்டும் தான் என்று. கோபம் முழுவதும் சாரு மேல் தான் முதலில் திரும்பியது. இதை கடத்தல் என அனைவரையும் நம்ப வைக்க அவள் ஆடும் நாடகம் தான் என எண்ணியவன் வேகமாய் அவனை பிடித்து தள்ளி விட்டு அறையிலிருந்து வெளியே வந்தான் சக்தி.

இவன் வெளியேறவும் அறை வாசலில் தயங்கி நின்று கொண்டிருந்த சாருவின் அம்மா.."தம்பி.." என்றழைத்தார். இவன் திரும்பவும்.."உங்க கிட்ட ஒன்னு சொல்லனும். சாருவ வேற காணோம் அதுனால இதுல அவனுக்கு எதுவும் சம்பந்தம் இருக்குமோ தோணுது." அவர் கூறவும் குழப்பமாய் அவரைப்பார்த்த சக்தி.."யார்க்கு அத்தை..?" என்றான் கேள்வியாய்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Όπου ζουν οι ιστορίες. Ανακάλυψε τώρα