❤சிதறிடும் மழைத்துளியிலும்
உன் முகம்...
வான் நிலாவிலும்
உன் முகம்...
நிஜங்களும்
நிழலாய் தோன்றிட..
மாயங்கள் செய்கிறாயே
என்னுள்...❤உள்ளே வந்து நிமிடங்கள் கடந்த போதும் அவன் திரும்பவில்லை..சாரு அவனது விறைத்த உடலையும் முறுக்கிய கைகளையும் பார்த்துவிட்டு போய்விடலாமா என தோன்ற எதற்கும் அழைத்துப்பார்ப்போம் என யோசித்தவள்..
ரம்யா சொல்லிக்கொடுத்தது போல்..
"சார்ர் பைல்"என்று கூற பதிலின்றி சில கணங்கள் கடந்த பின் அவனும் "டேபிள்ள வை" என்று கூறிய அதே வேளை இருவருக்கும் ஒன்றாகவே அந்த குரல் என தோன்ற சட்டென இவள் பக்கமாய் திரும்பினான் சக்தி.சாருவும் அதிர்ந்து.."கடவுளே இவன்கிட்டயா வந்து மாட்டினம்..அபோ இவன் தான் சிவா ஐயா மகனா..அவருக்கு இப்படி ஒரு மகனா.." என பலவாரும் யோசித்தவள் தீம்பிழம்பாய் எரிந்து கொண்டிருந்த அவன் கண்கள் சட்டென அவள் காலை நோக்கி நகர.. மீண்டும் அங்கிருந்து மீண்டு அவளது முகத்தில் வந்து நிலைத்தது கோபமாய்..
"எதுக்கு இப்போ இப்படி பாக்குறான்.." அவனது பார்வையில் புரியாது யோசித்தவள் அப்போதுதான் கால் பற்றிய நினைவு வர.."ஐயோ காலு மறந்துட்டேனே" என சட்டென ஒரு காலை தூக்கிக்கொண்டு ஒற்றைக்காலால் நொண்டிக்கொண்டே நின்றாள் சாரு.
சக்தி நிதானமாய் இவளருகில் வர இவளும் நொண்டிக்கொண்டே பின் நகர்ந்தாள். அவன் முன்னே வர இவள் பின் நகர..ஒரு கட்டத்தில் சுவரில் தட்டி இவள் நிற்க..நெருங்கி வந்த சக்தி ஒரு கையை சுவற்றில் வைத்து அவளருகே குனிந்து.." உனக்கு வலது கால் தான் அடிபட்டதாக எனக்கு ஞாபகம்" அதே நிதானத்தோடு கூறினான்.
அதிர்ந்து விழித்தவள் குனிந்து நோக்க அப்போதுதான் உறைத்தது தான் வலது காலில் நின்று கொண்டிருப்பது. மற்றைய கால் தானாகவே கீழிறங்கிவிட அவனை தயக்கத்துடனே நிமிர்ந்து நோக்கினாள். அவனும் அவன் கூர் விழிகளால் அவள் விழிகளினுள் ஆழ்ந்து நோக்க..அவன் விழிகளுக்கு கட்டுப்பட்டது போல் இவளும் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள். கணங்கள் நிமிடமாக கடக்க சட்டென அவள் அருகில் சுவரில் பதித்திருந்த கையால் அவளருகில் சுவரில் பலமாக தட்டியவன்.."டேவிட்..." என கர்ஜிக்க அந்த கட்டம் முழுவதுமே எதிரொலித்தது அவன் குரல்.
أنت تقرأ
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)
العاطفيةசக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....