❤ 27 ❤

5.9K 248 150
                                    

❤ஏன் தேவி இன்று நீ
என்னைக் கொல்கிறாய்..
முள் மீது ஏனடி
தூங்கச் சொல்கிறாய்..
உன்னைத் தேடித் தேடியே
எந்தன் ஆவி போனது..❤

அன்றைய நாள் அழகாக விடிந்திருந்தது அவர்கள் இருவருக்கும், முக்கியமாக அவளுக்கு. ஆனால் அந்த அழகிய என்ற வார்த்தைக்கு ஒவ்வொருவருக்கும் பின் இருந்த காரணம் வேறு தான்.

"செம்மயா பன்னிட்டயே வேலு.. நான் கூட உனக்கு பேச்சு மட்டும் தான் நினைச்சேன்.. " தீக்ஷா தன் முன் கைகட்டி நின்றிருந்த வேலுவை பார்த்து மெச்சுதலாய் பேச..

"நன்றி மேடம் நன்றி.."என அவனும் நெளிந்து கொண்டிருந்தான்.

"சரி அந்த லாறிய என்ன பன்ன.."

"அது பத்தி நீங்க கவலையே பட வேணாம்.. ஆக்ஸிடன்ட் ஆனதும் நம்ம பய அங்கேயே வண்டிய நிறுத்திட்டான். நம்ம ப்ளான் பன்னாத ஒன்னு சிக்னல்ல அந்த பொண்ணு வண்டிய நிறுத்தாதது அதுனால தப்பும் நம்ம பய மேல இல்ல அதே நேரம் ஆக்ஸிடன்ட் மாதிரியே நம்மளுக்கு நினைச்சதையும் செய்ய முடிஞ்சது மேடம்.." வேலு கூற கூற தீக்ஷாவின் வெற்றி சிரிப்பு மேலும் கூடிக்கொண்டே போனது.

"மேடம்.." தீக்ஷா அமைதியாய் இருக்க மெதுவாய் அழைத்துப்பார்த்தான். அவள் நிமிர.. "நீங்க சொன்னது போல செஞ்சாச்சி.. இப்ப உங்க ரூட்டும் க்ளியர்.. நான் பேசினது கொடுத்தீங்கன்னா..நான் என் வழியில போயிட்டே இருப்பேன்.."வேலு தலையை சொறிந்து கொண்டே கூறினான்.

"ராகுல்.." என தனக்கு கொஞ்சம் தொலைவாய் நின்றிருந்த அவளது பி ஏ வை அழைத்தாள். எங்கே நடந்து வந்தாலும் மேடம் சாலரியை வெட்டி விடுவாளோ என ஓடி வந்து அவள் முன் நின்றான். தனது கையால் இரண்டு என காட்டி வேலுவை காட்டினாள்.

அவனும் புரிந்து கொண்டு தலையாட்டி விட்டு உள்ளே சென்று ஒரு பையோடு வந்து அதை வேலுவிடம் கொடுக்க அவன் கண்களை அவனுக்கே நம்ப முடியவில்லை. ஐம்பது லட்சம் தான் அவன் கேட்டது ஆனால் அங்கிருந்ததோ கட்டு கட்டாய் ஐம்பதையும் தாண்டிய பணக்கட்டுக்கள்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now