❤ 20 ❤

5.6K 237 109
                                    

❤உன்னை நினைக்க
மறந்திடா இதயம் இது..
முப்பொழுதும்
உனையன்றி வேறு
நினைவில்லை..
இருந்தும் கரையாததோ
உன் இதயம்..
கலங்குகிறேன்
எப்பொழுதும்...❤

நிமிர்ந்த சக்தி மீண்டும் கண்களை இறுக்க மூடியிருந்தவள் நோக்கி குனியவும் சட்டென அவனை தள்ளிவிட்டாள் சாரு.
தள்ளிவிடவும் தான் தன்னிலை உணர்ந்தவன் தான் என்ன செய்தோம் என கண்டறியவே சில நேரம் பிடித்தது. அதற்குள் தன் கன்னத்தை அழுந்த துடைத்துக்கொண்ட சாரு..அவனை முறைத்துக்கொண்டே " என்ன சார் இது..உங்களுக்கு அறிவு இல்ல.. சின்ன புள்ளத்தனமா இப்படி கன்னத்த எச்சில் பன்னுறீங்க..முதல்ல நல்லா சோப்பு போட்டு கழுவனும்." அழுந்த அழுந்த துடைத்துக்கொண்டே படியிறங்கிச்சென்றாள் சாரு.

சக்திக்கு சிரிப்பு தான் வந்தது அவள் செயலில். கோபமோ துளியும் இல்லை அவனுக்கே ஆச்சரியமாய்த்தான் இருந்தது. இதுவரை எந்த பெண்ணிடமும் இப்படி தோன்றியதை விட்டு நிமிர்ந்து பார்க்க வேண்டும் என்று கூட நினைத்ததில்லை. ஆனால்... மேலும் யோசிக்க அவனுக்கு தேவையிருக்கவில்லை சில காலமாகவே அவனும் யோசித்துக்கொண்டு தான் இருந்தான் அவனுள்ளே ஏற்பட்டிருக்கும் மாறுதல்கள் பற்றி..அதனாலோ இன்று இந்த சின்ன தீண்டல் போதுமாய் இருந்தது சக்திக்கு அவன் மனம் புரிந்திட..
முதன் முதலாக நிலா அவனிற்கு அழகாய் தோன்றியது. அதைவிடவும் அதில் தெரியும் அவனது மதியின் முகம் வெகு அழகாய் இருந்தது. வெகு நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.

கீழிறங்கி அறைக்கு வந்த சாருவின் இதயமோ தாறுமாறாய் துடித்துக்கொண்டு இருந்தது. என்னதான் அங்கு கோபமாய் பட பட என பொரிந்து விட்டு வந்துவிட்டாலும் மனம் ஒரு நிலையில் இருக்க மறுத்தது. இதயமும் விட்டால் தொண்டைக்கு வந்து விடுவேன் என்பது போல் நாலா பக்கமும் அடித்துக்கொண்டிருந்தது.

"என்ன இது இப்படி பட பட ன்னு அடிக்குது.. இங்க வேற குறு குறு ன்னு இருக்கு.. இந்த சக்தி என்ன பன்னி வச்சான்.."மீண்டும் மீண்டும் கன்னத்தை தொட்டுப்பார்த்துக்கொண்டாள். வெகு நேரமாக உறக்கமின்றி புரண்டு புரண்டு படுத்தவள்.. ஒரு முடிவுடன் எழுந்து மாடிக்கு சென்றாள். அவள் நினைத்தது போலவே அவன் அங்கு தான் இருந்தான்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now