❤ 2 ❤

7.8K 231 132
                                    

மொழிகளும்
மௌனமானது
உன் இரு
விழி மொழி
கொண்டு
நீ செய்த
மாயங்களால்

"Idiots"
எரிந்து விழுந்தவாரே தன் கோட்டின் மடிப்பை நீவிக்கொண்டான் சக்தி.

நிலாவும் சதீஷும் தலை குனிந்தவாறே நின்று கொண்டு கீழ்கண்ணால் ஒருவரை ஒருவர் முறைத்தவண்ணம் இருந்தனர்.

"நிலா"

சக்தி தொடங்கும் போதே அவன் தொலைபேசி சிணுங்க அதனை ஏற்று பேசியவாறே சற்று விலகி நடந்தான்.

அதுவரை அமைதியாய் குனிந்த தலை நிமிராமல் இருந்த இருவரும்,

"எல்லா உன்னாலதான்"
என்றவாறே நிமிர்ந்தனர்.

இருவரும் ஒரே சமயம் கூற கோபம் மறந்து இருவரும் சிரித்துக் கொள்ள, சக்தி இவர்களை நோக்கி வந்தான்.
சட்டென பழைய நிலைக்கே திரும்பினர் இருவரும்.
இருவரையும் ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவன்
"நிலா" என உறும, தயங்கித்தயங்கி நிமிர்ந்தாள் நிலா.

"College இல்ல?"மீண்டும் உறுமலாய் ஒலித்தது.

"இ..இருக்கு"

" ஓஹ் அப்போ உங்களுக்கு டைம் போகலன்னு college போறிங்க..அதா அப்பா நிறையவே பணத்த கட்டி வெச்சிருக்காறே இல்ல."

"இல்லண்ணா"

"உஷ் இடையில பேசாத, look இப்போ அப்பாவொட கம்பனி அத்தனையும் என் கன்ட்ரோல்ர தான் இருக்கு mind it. உனக்கு டைம் போகலன்னு college போய் படிப்ப கேவலப்படுத்தாத..அப்படி நீ நெனச்சா தாரளமா வீட்ல இரு. உண்மையிலே படிப்பு அவசியமான ஒருதர்க்கு அந்த வாய்ப்ப கொடுத்துட்டு. இல்ல உனக்கும் உண்மையிலே படிக்கனும்னு நினைச்சா இந்த விளையாட்டு எல்லாம் ஓரமா வெச்சிட்டு படி. Idiot understood?"

கர கர என கண்ணீர் வடிய தலையை அவசர அவசரமாக ஆட்டினாள்.
நிலாவைப்பார்க்க பாவமாக இருந்தது சதீஷிற்கு. இவளுக்குத்தான் எத்தனையோ முறை சொல்லிருக்கேனே அண்ணா இப்படித்தான் அவர் சொல்ரத இந்த காதால வாங்கி அந்த காதால விட்டுடுன்னு. அப்பக்கூட அழுதுகிட்டு நிற்கிறத பாரு.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now