❤ 11 ❤

5.5K 277 118
                                    

❤உயிர்வரை தீண்டி
செல்கிறது
உன் சுவாசம்...
ஆயிரம் வளிகளுடன்
கலந்திருந்த போதும்
தனியாய் என் இதயவழி
அடைந்து மாயம்
செய்வதால்...❤

"ஷட் அப். நடிக்காத நீ  மகேஷ் அனுப்பின ஆள் தான?"
அவன் கேட்டதில் அதிர்ந்து நோக்கினாள் சாரு.

அவளது அதிர்ந்த பார்வையிலேயே அவனது ஊகம் சரிதான் என்பது புலப்பட தலையை சரித்து கண்களை மூடி வெற்றிச்சிரிப்பு சிரித்தவன் மீண்டும்  சாருவின் பக்கமாய் திரும்பி அருகில் வந்து..
"ஹ்ம் சொல்லு எவ்வளோ பணம் தந்தான்..என்ன செய்ய சொன்னான்?"மிரட்டலாய் ஒலித்தது அவனது குரல்.

"அய்யோ சார்ர் அவன் பணம் தரல்ல.. நான் தான் அந்த மகேசுக்கு எம்பது ரூவா கொடுக்க இருக்கு.." அவள் மறுத்து தலையசைக்க..குழம்பியவாறு நெற்றியை சுருக்கி "வாட் ?" என்றான் சக்தி.

"வாட் இல்ல சார் அது வாத்து..அவன்கிட்ட ரெண்டு வாத்து குட்டி வாங்கினன். ஒன்னு நாப்பது ரூவா ன்னு தந்தான். எதுவும் ஆகாது நல்லா ஓடியாடி திரியும் சொன்னான் நானும் நம்பி வாங்கினேன்.. ஆனா வாங்கி இரண்டு நாள்ளே செத்து போச்சி.. அதுவும் இரண்டுமே சார்..அதான் பணம் தர முடியாது சொல்லிட்டு கெளம்பி வந்துட்டன்.இப்ப உங்கள்ட போட்டு கொடுத்துட்டான் போல.. இருக்கட்டும் சார் நீங்களே சொல்லுங்க செத்துப்போன வாத்துக்கு பணம் கொடுக்குறது எப்படியாம்? அதுவும் அவன் பொய் சொல்லில தந்திருக்கான்"

சாரு அபிநயத்துடன் நீட்டி முழக்கி கதை பேசி முடித்து விட்டு அவனிடம் நியாயம் வேறு கேட்க.. ஆனால் த க்ரேட் சக்தி தான் முதல்முறையாக தன் தவறுக்கு தலையிலே அடித்துக்கொண்டான்.

"என்ன சார்..நான் சொல்லுறது தான சரி.. ?" அவள் இருந்த கதிரையில் சாய்ந்து அமரந்த நிலையிலேயே குனிந்திருந்த சக்தியின் முகம் காண அவனை நோக்கி குனிந்து அண்ணாந்து அவன் முகம் பார்த்து வினவ..மெதுவாய் அவளிடம் இருந்து விலகி நிமிர்ந்து அவளது முகம் நோக்கினான் சக்தி..

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Opowieści tętniące życiem. Odkryj je teraz