❤ 52 ❤

4.6K 222 55
                                    

இது வரை
எங்கிருந்தாய்
இதயமும்
உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே
மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி
நுழைந்து
கொண்டாய்..

நீ ஒருத்தன் போதும்டா..தலையில் அடித்துவிட்டு சதீஷை முறைத்துக்கொண்டு சமயலரை வாசலில் நின்று கொண்டிருந்தாள் நிலா.

விழித்துக்கொண்டிருந்த சதீஷை.."சதீஷ்.." என அழைத்து அவன் கவனத்தை தன் பக்கம் திருப்பினார் சாவித்ரி.

தன்னை சரிசெய்து கொண்டவன்.."அதா மா மதன்..இது காதலா சீரியல்ல வருமே நிலா அதோட புருஷன் தான? ..."

"டேய் அதுல எங்கடா நிலா வருது..?"

"ஓஓஓ அப்போ இல்லையா...சரி அப்போ நீங்க யார கேட்குறீங்க..?"
அப்பாவியாய் கேட்டான்.

"ரம்யாவோட அத்தை சாரதாவோட பையன் மதன்.."

"ஆஆஹ் ஆமா ஆமா அந்த தென்னை மரத்துக்கு கைகால் முளைச்ச போல அப்புறம் தலையில காடு வளத்திருப்பானே அவனையா சொல்லுறீங்க..?" முறைத்துப்பார்த்த நிலாவைப்பார்த்து பல்லைக்காட்டி விட்டு கேட்டான்.

"அண்ணி மகள் மைதிலி நம்ம நிலா வயசு தான்.. அவளுக்கு வரன் பார்க்குறாங்களாம். நல்ல இடம் இருந்தா சொல்ல சொன்னாங்க.. மதன் நல்லம்லடா.. நான் சொல்லி பார்க்கலாம் இருக்கேன். ரொம்ப நல்ல பையன்." சாவித்ரி தோசை ஊற்றிகொண்டே பேச.. அதிர்ந்து விழித்த நிலா தொப் என பக்கத்தில் இருந்த கதிரையில் அமர சதீஷ் அவளையும் சாவித்ரியையும் மாறி மாறி பார்த்து விட்டு..

"சூப்பர்மா.. ஜோடிப்பொருத்தம் கூட செம்மயா இருக்கும்.." என்றவாரு நிலாவை பார்க்க அவள் கண்களாலே எரித்துக்கொண்டிருந்தாள்.

"இல்லடா.." சாவித்ரி கூற..

"ம்மா நீ லேட் பன்னாம இப்போவே அத்தைக்கு பேசுமா.. நல்ல விஷயத்தை தள்ளி போட கூடாது.." சதீஷ் கூறவும்.. அதுவும் சரிதான் என சாவித்ரி அங்கிருந்து நகர.. நிலாவோ இப்போதோ விட்டால் அழுது விடுவேன் என்ற நிலையில் தான் இருந்தாள்.

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)Where stories live. Discover now