காற்றில் காகிதம் செய்து - உன்
மெளனங்களை மொழிப் பெயர்த்து...
மூச்சாய் தினம் அதை சுவாசிக்கிறேன்...கையோடு கை சேர்த்து கடற்கரை மணலில் கால் பதித்து விளையாடினாய்...
கடல் மணல் ஒவ்வொன்றிலும் - நாம்
செதுக்கி வைத்தோம் நம் காதலை கல்வெட்டுக்களாய்...பூங்காவின் மரங்கள் யாவும் தாங்கி நிற்கும் நம் நினைவுகளை...
ஆனால் நீயோ பிரிந்து சென்றாய்...
எனை மறந்து சென்றாய்....அனுமதியின்றி உன் விரல் தீண்டவும் மனமில்லை நீ என்னை பிரிந்து சென்ற போதும்...
விதியோ என்னை புயலென தாக்க...
கலங்கரை விளக்கமில்லா கரையை நோக்கி பயணிக்கும் கப்பலானேன் நான்...உன் நினைவுகள் நெஞ்சில் ஊஞ்சலாட நிறைவேறாமல் போனது நீ என்னவள் என்ற ஆசை...
நாம் கடந்து வந்த நாட்கள் கண்களோரம் கண்ணீராய் கசிகின்றது...
உன் இடத்தை இனியொருத்தி நிரப்பிட வழியில்லை...