ரதியின் முகம்

158 25 67
                                    

காற்றோடு இசைந்தாடும் கருமுகிலாய் கூந்தலமைத்து
பரந்து விரிந்த நெற்றி வானில்
பறவையின் சிறகாய் புருவங்கள் விரித்து
பாலூரும் கிணற்றின் நடுவே முகம் பார்க்கும்
கருநிலவாய் இரு கண்கள் பதித்து
 மூங்கிலை வளைத்து மூக்காய் வடித்து
பளிங்கு கற்களை பஞ்சாய் சமைத்து
கன்னங்களமைத்து
சுட்டாலும் வெண்மை தரும் சங்கை வெல்லும்
பற்களைக் கொண்டு வேலியமைத்து
மாதுளம் பழரசத்தில் துவைத்தெடுத்த
ஆரஞ்சு சுளை யிரண்டால் இதலென்னும் சுவரெழுப்பி
நாவை மட்டும் சிறையிலடைத்தான்
சிந்தும் வார்த்தைகள் யாவும் முத்துக்கள் என்பதாலா..?

இங்ஙனம்,
முத்துக் குளிக்கும் நாளை எதிர்பார்த்த மீனவனாய் நான்.

அவளும் நானும்Where stories live. Discover now