காற்றோடு இசைந்தாடும் கருமுகிலாய் கூந்தலமைத்து
பரந்து விரிந்த நெற்றி வானில்
பறவையின் சிறகாய் புருவங்கள் விரித்து
பாலூரும் கிணற்றின் நடுவே முகம் பார்க்கும்
கருநிலவாய் இரு கண்கள் பதித்து
மூங்கிலை வளைத்து மூக்காய் வடித்து
பளிங்கு கற்களை பஞ்சாய் சமைத்து
கன்னங்களமைத்து
சுட்டாலும் வெண்மை தரும் சங்கை வெல்லும்
பற்களைக் கொண்டு வேலியமைத்து
மாதுளம் பழரசத்தில் துவைத்தெடுத்த
ஆரஞ்சு சுளை யிரண்டால் இதலென்னும் சுவரெழுப்பி
நாவை மட்டும் சிறையிலடைத்தான்
சிந்தும் வார்த்தைகள் யாவும் முத்துக்கள் என்பதாலா..?இங்ஙனம்,
முத்துக் குளிக்கும் நாளை எதிர்பார்த்த மீனவனாய் நான்.