கிராமத்து மண்வாசம்...

266 33 13
                                    

கரிசல் காட்டுக்குள்ள காதலத்தான் சொல்ல வந்த கள்ளி...
நேரம் பாத்து காத்திருந்து... காதோரம் காலத்தான் சொல்லி...
ஓடிச்சென்று நின்னாலே தள்ளி...

வாடி புள்ள வாடி...

உன் வாசம் பட்டு பூவாக பூத்தது என் நெஞ்சு...
உன் பார்வையால பத்திகிச்சு...
பஞ்சாகிப்போன நெஞ்சு ...

நீ தள்ளி நின்னா தாங்காது.
நெஞ்சோடு நெஞ்சனைத்து ஆசையெனும் தீயணைக்க வா...

மண்வாசையில் மெதக்குது மனசு...
உன்ன கட்டிக்கொள்ள துடிக்குது வயசு...

சாயங்காலம் ஆனபின்னே...
ஊரடங்கி போன பின்னே...
காவலுக்கு சந்திரன வச்சிட்டு வா...
மாந்தோப்பில் என்னோட மல்லுக்கட்ட வா...

சூரியன் முழிக்கும் முன்னே...
சேவலுந்தான் கூவும் முன்னே...
வீடு போயி சேந்திடலாம்...
விட்டதெல்லாம் நாளைக்குதான் முடிச்சிடலாம்.. :p

அவளும் நானும்Where stories live. Discover now