சக நண்பர்களெல்லாம் ஆழ்துயில் கொண்டிருக்க...
நடுநிசியில் ஊர்சுற்றிய பேய்களெல்லாம்
களைப்படைந்து கதை பேசி ஓய்வெடுக்க...அலாரம் அடிக்கும் முன்னெழுந்து...
அதை அனைத்துவிட்டு...
அதிகாலைப் பொழுதில் குளிக்களானேன்...முதன்முறை உனை நேரில் காணும் ஆவல் என் நெஞ்சில் குளிரூட்ட...
தண்ணீரின் குளிரை உணர மறந்தேன்...சத்தமின்றி சட்டையணிந்து...
பக்குவமாய் பேன்ட் அணிந்தேன்...
தூங்கும் நண்பர்கள் பார்த்துவிடக் கூடுமென...கண்ணாடி முன்னின்று தலை வாரியதில்லை...
இன்று கண்ணாடியை விட்டு நகர மனம் கேட்கவில்லை...தொலைவிலிருக்கும் உன்னை என்னோடு சேர்த்து வைத்ததே...
தொலைதொடர்பின் மாபெரும் சாதனையாம்...தவறுதலாய் நான் தட்டிவிட்ட குருஞ்செய்தியொன்று எனை ராங்க் நம்பரென அறிமுகம் செய்து வைத்தது...
கைபேசியினூடே காதல் வளர்த்த நாமின்று ஒருவரையொருவர்... காணவிருக்கிறோம் கண்களால் பல கவிதைகள் பறிமாற...
விடியுமுன் விரைகின்றேன் இரண்டாம் சூரியனாய் உனைக்காண...
--------- கவிதைத் தொடர் -----------
---------- -----------