பிரிந்து சென்றாள் பறந்து

109 27 73
                                    

நீண்ட நெடுங்காலமாய்
நீயும் நானும்

காதலித்த போது
கண்டதில்லை குறையேதும்...

திருமணம் என்று ஆன பின்னே
தொட்டதற்க் கெல்லாம் சினம் கொண்டாய்...

புகுந்த வீட்டைப் புறந்தள்ளி
பிறந்த வீடு பறந்து சென்றாய்...

பிரிந்து செல்லும் கையோடு என்
சூரியனை சிறை பிடித்து
என் பகலையும் இரவாக்கிச் சென்றாய்...

விடியாத பொழுதில் விளக்கேற்றிட நீயில்லை
அடையாத துன்பமதை விளக்கிக் கூறிட வார்த்தையில்லை...

இன்னல் பல வந்த போதும்
சிந்தவில்லைக் கண்ணீரை -யின்று
நீயில்லை என்ற போது

கண்ணில்

அணைபோடவும் முடியவில்லை...

இருந்தும் ஊரறியா என் கண்ணீரைத்
துடைக்க நீளும் உன் கைகள்
இருக்கும் வரை காத்திருப்பேன்
கண்ணீரோடு...

அவளும் நானும்Where stories live. Discover now