வேலை முடித்த களைப்பில் வீடு திரும்பினேன்.
எதிர்பார்ப்பின் உச்சத்தில் கதவை திறந்து எதிரே நின்றாள்.
வேண்டுமென்றே மறந்துவிட்டேன்
அவள் கேட்ட மல்லிகையை..கோபத்தோடு கதவை சாத்தி உள்ளே சென்றாள்.
கதவோ ஏளனமாய் எனைப் பார்த்து சிரித்து வைத்தது...
இரவுக்கு வீட்டில் உணவில்லை என்றாள்...மெழுகுவர்த்தி விருந்துக்கு அவளை நான் அழைத்து சென்றேன்..
இது முன்பே நான் திட்டமிட்டது என்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை...