ஐந்து வருடங்களுக்கு முன்பு
அது ஒரு பெரிய திருமண மண்டபம் வினிதா வேட்ஸ் கார்த்திக் என்று எழுதியிருந்த வரவேற்பு பகுதியில் விக்ரம் தன்னுடைய நண்பர்களுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்தான்
சதாசிவத்தின் அக்கா மகளுக்கு அன்று திருமணம் ராஜேந்திரனின் ஒன்றுவிட்டு தங்கைதான் வித்யா இருந்தாலும் அவருக்கு சொந்த தங்கை இல்லாததால் வித்யாவை சொந்த தங்கை போன்று பாவித்து வந்தார்
அனைவரும் சென்னையிலேயே வாழ்வதால் எந்த குடும்ப விசேஷம் என்றாலும் அனைவரும் ஒற்றுமையாக இணைந்துவிடுவார்கள்
சதாசிவத்தின் அக்கா பூர்ணிமா மிகவும் அன்பானவர் அவருடைய கணவர் குமரேசன் தன் மனைவியைப் போலவே அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் தன் மனைவியின் தாய் வீட்டை தன்னுடைய குடும்பம் போலவே எண்ணி அனைவரிடமும் எந்த வித்தியாசமும் இன்றி பழகுபவர்
அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் மகள் வினிதா சென்ற வருடம் எம். இ கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்திருந்தாள்
மகன் வினித் பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவன் எப்பொழுதுமே துறு துறு என்று சுற்றிக் கொண்டிருப்பதால் அனைவருக்குமே அவனை உடனே பிடித்து விடும்
YOU ARE READING
விக்ரமின் வேதா 💖
Romanceஇரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖