வேதா தானும் குளித்துவிட்டு தர்ஷினியையும் குளிக்க வைத்து விட்டு ஆடையை மாற்றிக் கொண்ட பின் தன்னுடைய பெட்ரூம் அறைக்கதவை திறக்க அதுவரை வெளியே அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த விக்ரம் குளிக்கச் சென்றான்
அவன் குளித்துவிட்டு வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு வெளியே வரும் பொழுது வேதா தன்னுடைய தலை முடியை ட்ரெஸ்ஸிங் டேபிளின் முன் நின்று கொண்டு உலர்த்திக் கொண்டு இருந்தாள்
சிறிது நாட்களாக அவன் குளித்து விட்டு வெளியே வரும்பொழுது இருவரும் வெளியே சென்று இருப்பார்கள் இன்று அவள் அறையில் இருக்கவும் ஆச்சரியப்பட்டுக் கொண்டே விசிலடித்தபடி அவள் பக்கத்தில் போய் நின்று கொண்டு தன் தலையை துவட்ட ஆரம்பித்தான்
அப்படிப் துவட்டும் பொழுது சில தண்ணீர் துளிகள் அவள் மீது பட்டது
அவனை தொட்ட நீர்த்துளிகள் அவளை தொடவும் அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு உண்டானது அந்த சிலிர்ப்பை உணரும் பொழுது அவளுடைய மனசாட்சி "வேதா இது சரி இல்ல திரும்பவும் அவன்கிட்ட மயங்காதே" என்று எச்சரித்தது
"அதுவும் சரிதான்" என்று தன் மனசாட்சியிடம் கூறியவள் அவனை பார்த்து முறைக்க ஆராம்பித்தாள்
இவன் என்ன என்று புருவத்தை தூக்கி கேட்கவும் "தண்ணி மேல படுது கண்ணு தெரியலையா"? என்று கேட்கவும்
"தோடா மேல படுதுனா அப்படித் தள்ளி நில்லு" என்று அவன் அலட்சியமாக கூறினான்
அவனை முறைத்தவள் அப்போது கண்ணாடியில் எதேச்சையாக தான் அணிந்து கொண்டு இருக்கும் ஆடையை பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்
YOU ARE READING
விக்ரமின் வேதா 💖
Romanceஇரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖