தன் ஆடையை சுத்தப்படுத்திவிட்டு வந்த வேதா கட்டிலின் மேல் கண்ணை மூடிக்கொண்டு படுத்திருக்கும் விக்ரமை பார்த்தாள்
"இவன் நிஜமாவே தூங்குறானா இல்ல நடிக்கிறானா? நேத்து மாதிரி ஒரு டெஸ்ட் பண்ணவிடுவோமா?" என்று யோசித்தவள்
"சேசே இப்போ நம்ம பதுங்கவேண்டிய நேரம் இத பொறுமையாதான் ஹான்டில் பண்ணனும்" என்று நினைத்தவள்
மெதுவாக அவனிடம் சென்று "மாம்ஸ்..." என்று மெல்லமாக அழைத்தாள்
அவன் வேண்டுமென்றே கண்களை திறக்காமல் படுத்திருந்தான்
"நிஜமாவே தூங்கராரோ"? என்று அப்பாவியாக நம்பியவள் பின்பு சத்தமாக "மாம்ஸ்....." என்று கத்திக்கொண்டே அவனை போட்டு உலுக்கினாள்
அப்போதுதான் தூக்கத்திலிருந்து கலைவது போல் அவன் கண்களைத் திறந்து எதையோ தேடுவது போல் தேடினான்
அதை பார்த்தவள் "என்ன தேடுறீங்க"? என்று கேட்கவும்
"இல்ல.. யாரையோ மாம்ஸ்னு கூப்டியே அதுதான் யாருன்னு பாக்குற" என்று கூறவும்
அவள் அவனை முறைத்து "என்ன நக்கலா?" என்று கேட்டாள்
"இல்ல.... நீங்க தான் கொஞ்ச நாளா என்கிட்ட பேசுறதே கிடையாது அப்படியே பேசினாலும் வாங்க போங்கனு தான் கூப்பிடுவீங்க அதுதான் வேற யாரையோ கூப்பிடுறிங்களோனு நினச்சுட்டேன்...." என்று அவன் ராகத்துடன் கூறவும்
அவன் பேசியதில் அவளுக்கு பி. பி ஏரினாலும் "நோ வேதா நோ நீ இப்போ டென்ஷன் ஆகக்கூடாது" என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு நல்ல பிள்ளையாக
YOU ARE READING
விக்ரமின் வேதா 💖
Romanceஇரும்பை போல் ஒருவன்... அந்த இரும்பையே திக்குமுக்காட செய்யும் ஒருத்தி 💖