மறுநாள் காலை..
கதிர் கண் விழிக்கும் போது..முல்லை அவனை அணைத்து படுத்திருந்தாள்.முல்லை ஒரு கையில் கதிரின் சட்டையையும்...மறு கையால் கதிரை கட்டி அணைத்து படுத்திருப்பதை பார்த்து கதிருக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது....
கதிர்( மனதில்): கண் முழிச்சா..இப்படி முழிக்கனும் மனுசன் என்று தன் மனைவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்..
கதிர் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளை கீழே படுக்கச்செய்து அடுப்படி சென்று டீ போட்டுக்கொண்டுவந்து டீ கோப்பையுடன் முல்லையை ரசித்தபடியே டீ அருந்த..
முல்லைக்கு முழிப்பு தட்ட அருகில் கை வைத்து பார்த்து கதிர் இல்லாததால் சட்டென்று கண் திறக்க அவள் ஆசை கணவன் கையில் டீ கோப்பையுடன் அவளை விழுங்குவதை போல் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து வெட்கத்துடன் புன்னகைத்தாள்.
முல்லை: Good morning கதிர்....சீக்கிரம் எழுந்திட்டீங்களா?
கதிர்: Good morning அழகி. ஆமாடி...
முல்லை: மணி 5:30 தான் ஆகது...அதுக்குள்ள எழுந்திட்டீங்க..
கதிர்: முழிப்பு தட்டிடுச்சு.
முல்லை: ஏங்க...நீங்களே Tea போட்டீங்களா...wow...எனக்கு?
கதிர்: ஆமா....உனக்கும் சேர்த்து தான் போட்டேன். இரு எடுத்துட்டு வரேன்.
முல்லை எழுந்து முகம் அழும்பி Tea cup ஐ வாங்கிக்கொள்ள
முல்லை: கதிர் நேத்து Night....sorry...கோபமா?
என்று பாவமாக மூஞ்சியை வைக்ககதிர்: இல்லடி...இதுக்கெல்லாம் கோபப்படுவாக...ஆனா கொஞ்சம் ஏமாற்றம்...அவ்வளவுதான்.
முல்லை: நீங்க முழிச்சுகிட்டு இருப்பீங்கனு நினைச்சேன்...
கதிர்: நான் 1 hr wait பண்ணேன்...அப்புறம் எப்படியோ தூங்கிட்டேன்...
முல்லை: hmm. நான் பார்த்தேன்.
கதிர்: சரி முல்லை...நான் ground க்கு கிளம்புறேன்...இன்னைக்கு match practice இருக்கு...