இரண்டு வார முடிவில் கதிரும்...முல்லையும்...இந்தியாவிற்கு புறப்பட்டனர்.
அது அவர்கள் இருவரும் இணைந்து செல்லும் முதல் விமான பயணம்.
முன் பரிசோதனை முடிந்து போர்டிங் பாஸ் கொடுத்தவுடன் இமிக்ரேசன் வேலைகளை முடித்துவிட்டு இருவரும் காத்திருந்தனர்.
முல்லை: மாமா...
கதிர்: என்னடி...
முல்லை: Jerkin கழட்டிரவா?
கதிர்: குளிரப்போதுடி...
முல்லை: குளிரட்டும்...குளிருக்கு தான் நீங்க இருக்கீங்களே என்று சிரிக்க
கதிர்: அது சரி...அப்ப நான் வேணா கழட்டி விடட்டா...
முல்லை: வேண்டாம்..வேண்டாம்..நானே கழட்டிக்கிறேன்...நீங்க கைய வச்சிகிட்டு சும்மா இருங்க...
கதிர்: ஆமாடி..ஆரம்பிக்கிறது எல்லாம் நீ...அப்புறம் நான் சும்மா இருக்கனுமா..நீ எல்லாம் plan பண்ணி தான் பண்ற ஆமா...
முல்லை: ஆமா பண்றாக... உங்களுக்கு எதுவும் தெரியாது பாருங்க...ரொம்பதான்....
கதிர்: நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் அப்பாவி தான்டி..
முல்லை: ஆமா ஆமா சொல்றாக..
பேசிக்கொண்டிருக்கும் போதே சுங்கச்சோதனைக்கு அழைப்பு வரவே...
சுங்கச்சோதனை முடிந்து மேலே விமான நிலையத்தின் மேல் தளத்தில் வந்து காத்திருந்தனர்.
பல விமானங்கள் வந்து இறங்குவதையும்..run way ல் ஊர்ந்து சென்று ஆகாயத்ஆல் பறப்பதையும்...விமான நிலையத்தின் குழுமியுள்ள பல்வேறு நாட்டினரையும்... shopping மால்களையும் கை கோர்த்து மகிழ்ச்சியுடன் அவர்கள் சுற்றி வந்து அமர
கதிர் முல்லை யை தன் பக்கம் திருப்பி இதழில் அவள் எதிர்பாராத நேரத்தில் முத்தமிட
முல்லை அந்த திடீர் தாக்குதலில் நிலை குழைந்தாள்...சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்ட முல்லைமுல்லை: ஆரம்பிச்சாச்சுலே..உங்க அப்பாவிதனத்த...
கதிர்: கட்டுண பொண்டாட்டிய முத்தம் குடுக்குறது எல்லாம் அப்பாவி தனம் தான்டி...