Great welcome to 6th part of my story...thanx everyone for the fabulous support.... thanx for encouraging me...
அம்மா... அம்மா...
என்ன டா விஜய்?
அனைவரும் டைனிங் டேபிலில் அமர்ந்து இருந்தனர் இரவு உணவிற்கு... சமையலரையி்ல் இருந்த தன் அன்னையைதான் விஜய் அழைக்கிறான்..
ஏன் டா இப்படி என்ன ஏலம் விடுற
அம்மா... அப்பா எதோ உங்கட்ட சொல்லனுமாம்... அப்பாவை பார்த்து கண்ணடித்துக்கொண்டே அம்மாவிடம் கூறினான்...
ஏன்டா என்னைஇழுக்குற... மாணிக்கம் அவனை பார்த்து பொய்யாக முறைத்தார்....
தந்தை மகன் செய்யும் குறும்பை மற்ற மூவரும் சிரிப்புடன் ரசித்தனர்...
இரண்டு பேர்ல யாராவது என்ன விஷயம்னு சொல்ல போறேங்களா இல்லயா? நிர்மலா அவர்களை முறைத்தார்...
அண்ணா என்ன விஷயம்... இவ்ளோ சந்தோஷமா இருக்க? விஜி கேட்டாள்.
அதாவது... என்ன அப்பா சொல்லவா? என்று கூறி சிரித்தான்..
சொல்லு டா... எவ்ளோ நேரம் தான் வெய்ட் பண்ண? என்றார் நிர்மலா..
சரி சரி சொல்றேன்.. நம்ம வீட்டு இளவரசியை நாளைக்கு 4 மணிக்கு பொண்ணு பார்க்க வாராங்க...
இவ்ளோ நேரம் என்ன விஷயம் என்று தெரிவதற்காகவே அங்கு அமர்ந்திருந்த விஜி.. இதை கேட்டதும் பல வித உணர்ச்சிகளுடன் அமர்ந்திருந்தாள்....
என்னது!?! என்ன இவ்ளோ லேட்டா சொல்றேங்க.... நம்ம எதுமே வாங்கல? இனிப்பு காரம் எதுமே வாங்கல? என்று ஆதங்கப்பட்டார் நிர்மலா...
விடு மா... நாளைக்கு காலைல வாங்கிக்கலாம்...டேய் விஜய்.. நாளைக்கு காலைல நீ போய் தேவையானதை வாங்கி குடுத்துட்டு கம்பேனிக்கு வா.. சரியா?
ம்ம் சரி அப்பா... அம்மா லிஸ்ட் குடுங்க வாங்கிரலாம்...
![](https://img.wattpad.com/cover/91088924-288-k154907.jpg)
YOU ARE READING
கடவுள் தந்த வரம்
Romanceவிஜயதர்ஷினி சிவரஞ்சன்....பெற்றோர் நிச்சயித்த திருமணம்.... கூட்டுக் குடும்ப வாழ்க்கை..... தெளிந்த நீரோட்டமான வாழ்க்கை..... அன்பான வீடு... நான் எதிர்பார்க்கும் குடும்ப வாழ்க்கையை கதையாக சித்தரித்துள்ளேன்...வாருங்கள் நாமும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வோம்