1💕

16.8K 361 58
                                    

"எரும.. எழுந்திரு.. மணி எட்டாகுது.. இன்னும் தூங்குறத பாரு.."

"ச்சே.. வாரம் முழுக்க அந்த மேனேஜர் வேலை சொல்லி உயிர வாங்குறான்.. இந்த அம்மா ஞாயிற்றுக்கிழமை தூங்கவிடாமல் உயிரை வாங்குறாங்க.."என சலித்தபடி போர்வையை நன்றாக இழுத்து மூடிக்கொண்டாள் சக்தி.

"சக்தி.. எழுந்திருடா.." தன் செல்ல மகளை எழுப்பினார் சுந்தரம்.

"ப்பா.. ப்ளீஸ் பா.."

"சக்தி.. எழுந்திரு.."

சோகமாக முகத்தை வைத்தபடி எழுந்தாள் சக்தி.

"ம்.. குட் கேர்ள்.. போய் ரெடியாகிட்டு வாடா.."

"சரிப்பா.." என்று சொல்லி விட்டு எழுந்து குளித்து தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

டைனிங் டேபிளில் சக்தியின் அப்பா சுந்தரமும் அக்கா நிவேதாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

சக்தியும் அவர்களுடன் சாப்பிட உட்கார்ந்தாள். உப்புமாவைக் கண்டதும் சக்தியின் முகம் அஷ்டகோணலாக மாறியது.

நிவேதாவும் சுந்தரமும் அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

"கீதா.. உனக்கு என்னை பிடிக்கலைன்னா சொல்லு.. நான் எங்கயாவது போயிடுறேன்.. அதுக்காக இப்டி தினமும் உப்புமா செஞ்சு என்னை கொல்லாத.."னு சக்தி பாவமா முகத்தை வைச்சிட்டு சொல்றா.

அதைக் கேட்ட சக்தியோட அம்மா கீதா.. "உனக்கு நான் பண்ற உப்புமா பிடிக்கலைன்னா நீயே பண்ணிக்கோ.."னு சொல்றாங்க.

"அதுக்கு நான் இதையே சாப்பிடுக்கிறேன்.. ஈஈஈஈஈஈஈ.."னு சக்தி சொல்றா.

"ம்.."என கீதா சொல்ல சலிப்புடன் உப்புமாவை சாப்பிட்டாள் சக்தி.

விடுமுறை தினம் என்பதால் சக்தியும் நிவேதாவும் வெட்டியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சக்திக்கு போன் வந்தது. அவள் கல்லூரி நண்பன் ரகு தான் அழைத்தான்.

"சொல்லு ரகு.."

"சக்தி இன்னைக்கு லீவு தான.. ரெஸ்டாரண்ட்ல மீட் பண்ணலாமா.."

அடியே.. அழகே..Where stories live. Discover now