சக்தி facebook open பண்ணி.. profile picture மாத்துறா. அர்ஜூனும் அவளும் இருக்கிற போட்டோவை வைக்கிறா.
அர்ஜூன் அதை பார்த்துட்டு சிரிக்கிறான்.
சக்தி அர்ஜூன் கிட்ட.. "அர்ஜூன் நீ கவிதை லாம் எழுதி வச்சிருப்பல்ல.. அதை நான் பார்க்கலாமா.."னு கேட்கிறா.
"எல்லாம் உனக்காகனு எழுதுனது தானே.. எப்ப வேணா பாரு.."னு அர்ஜூன் சொல்றான்.
இரண்டு பேரும் பேசிட்டு இருக்கும் போது.. அர்ஜூனை பார்க்க யாரோ வந்திருக்கிறதா ஒருத்தர் சொல்ல.. அர்ஜூன்.. அது யாருன்னு கூட கேட்காம உள்ள வரச்சொல்லிடுறான்.
அர்ஜூனும் சக்தியும் பேசிட்டு இருக்கும் போது.. ப்ரீத்தி உள்ள வர்றா. அவளை பார்த்ததும் அர்ஜூன் கோபமாகுறான்.. ஆனா சக்தி அர்ஜூன் கையை பிடிச்சு.. அமைதியா இருக்க சொல்றா.
ப்ரீத்தி.. "அர்ஜூன்.. அம்மா.. அம்மாவுக்கு.."னு சொல்ல முடியாம தடுமாறா.
அர்ஜூன்.. "அம்மாவுக்கு என்னாச்சு.."னு லேசா பதற்றத்தோட கேட்கிறான்.
"அம்மாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம்.. சர்ஜரி பண்ணனும்னு சொல்றாங்க.. ஆனா.."
"ஆனா.. என்ன.. உங்க அப்பா தேடி கண்டுபிடிச்ச அந்த பாரீன் மாப்பிள்ளை எல்லா செலவையும் ஏத்துக்கிட்டாரா.."னு அர்ஜூன் கேட்கிறான்.
அதுக்கு ப்ரீத்தி தலையை குனிந்தபடி.. "அப்பா தவறி இரண்டு மாசமாச்சு.."னு சொல்றா.
"I.. iam sorry.. அம்மா இப்ப எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க.."னு அர்ஜூன் கேட்கிறான்.
உடனே அர்ஜூன் சக்தி கூட அந்த ஹாஸ்பிட்டலுக்கு போறான்.
அங்க ப்ரீத்தியோட அம்மா லலிதாவை போய் பார்க்கிறாங்க.
அவங்க அர்ஜூனை பார்த்ததும் எழுந்திருக்கிறாங்க.
அர்ஜூன்.. "அம்மா.. எழுந்திருக்க வேண்டாம்.. படுத்திருங்க.."னு சொல்றான்.
"எப்டி இருக்க அர்ஜூன்.."னு லலிதா கேட்கிறாங்க.
"நான் நல்லா இருக்கேன் மா.."னு அர்ஜூன் சொல்றான்.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..