32💕

8.1K 285 29
                                    

சக்தி உதய் போட்டோவை பார்த்த அதிர்ச்சியில இருக்கா.

அர்ஜூன் போன் ரிங் ஆகுது.. "அம்மா தான் கூப்பிடுறாங்க.."னு சொல்லிட்டு அர்ஜூன் போன் பேசுறான்.

போன் பேசி முடிச்சதும்.. "அம்மு.. வா கிளம்பலாம்.."னு அர்ஜூன் சொல்றான்.

கார்ல போகும் போது.. அர்ஜூன்.. "அம்மு.. நான் உன்கிட்ட நிறைய பேசணும்னு நினைச்சேன்.. ஆனா தாத்தா ஊருக்கு கிளம்புறேனு சொல்றாங்களாம்.. அதான் அம்மா உடனே வர சொன்னாங்க.. இன்னொரு நாள் நான் உன்கிட்ட மத்ததெல்லாம் பேசுறேன்.."னு சொல்றான்.

சக்தி காதில எல்லாம் விழுந்தாலும் மனசெல்லாம்வேற எங்கேயோ இருந்துச்சு.

அர்ஜூனும் சக்தியும் வீட்டுக்கு வர்றாங்க.

அர்ஜூனோட தாத்தா.. "நான் ஊருக்கு கிளம்புறேன்.. வந்தேன்.. உங்களை எல்லாம் பார்த்துட்டேன்.. அதுவே போதும்.. நான் கிளம்புறேன்.."னு சொல்றார்.

அர்ஜூன்.. "இன்னும் இரண்டு நாளாவது இருந்துட்டு போங்க.."னு சொல்றான்.

ஆனா அவர் பிடிவாதமா கிளம்புறேனு சொல்றார்.  இந்திரா.. "அப்ப நாங்களும் உங்களோட வர்றோம்.."னு சொல்றாங்க.

ஆனா அர்ஜூன்.. "ம்மா.. என்னால வரமுடியாது.. நீங்க வேணா போய்ட்டு வாங்க.."னு சொல்றான்.

ஆளுக்கு ஒன்னா சொல்லிட்டே இருக்காங்க. அப்புறம் கடைசியில அர்ஜூன்.. "ம்மா.. எனக்கு இந்த வாரம் முக்கியமான வேலை இருக்கு.. நானும் அம்முவும் அடுத்த வாரத்துல வர்றோம் அங்க.."னு சொல்றான்.

இந்திராவும் சரவணனும் சரினு சொல்றாங்க. அர்ஜூனோட தாத்தா கூட அவங்களும் கிளம்பிடுறாங்க.

சக்தி அங்கே தான் நின்னுட்டு இருக்கா. என்ன நடக்குது..னு எதுவுமே புரியாம கொஞ்ச நேரம் இருக்கா.

அர்ஜூன் வந்து.. "அம்மு.. என்னாச்சு.. அம்மா ஊருக்கு போய்ட்டாங்கனு இப்டி இருக்கியா.."னு கேட்கிறான்.

சக்தி எதுவுமே சொல்லாம அவனை பார்த்தபடி இருக்கா.

"அம்மு.. நான் கண்டிப்பா அடுத்த வாரம் உன்னை அங்க கூட்டிட்டுப் போறேன்.. நீ ரூமுக்கு போ.. ஒரு முக்கியமான வேலை இருக்கு.. நான் வந்துடுறேன்.."னு சொல்லிட்டு அர்ஜூன் கிளம்புறான்.

அடியே.. அழகே..Where stories live. Discover now