14💕

7.8K 296 12
                                    

நிவேதாவும் நிரஞ்சனும் கிளம்புறாங்க. சக்தி உதய்ய பார்க்க போறத நினைச்சு சந்தோஷமா இருக்கா.

"சக்தி.. என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க.."னு நிவேதா கேட்கிறா.

"நீ கிளம்புறல்ல.. அதான்.."னு சக்தி சொல்றா.

நிவேதா சக்தியை அடிக்க துரத்துறா. இரண்டு பேரும் வீட்டையே ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு இருக்காங்க.

ஒரு வழியா சண்டையெல்லாம் முடிச்சிட்டு நிவேதா நிரஞ்சன் கூட கிளம்புறா.

கீதாவும் சுந்தரமும் வழியனுப்பி வைக்கிறாங்க.

சக்தி உதய்ய பார்க்க போறதுக்காக கிளம்புறா. அந்த நேரம் சக்தியோட ப்ரெண்ட் சிவா போன் பண்றான்.

"சக்தி எங்க இருக்க.."னு சிவாவோட குரல் ரொம்ப பதற்றமா இருக்கு.

"வெளியே கிளம்பிட்டு இருக்கேன்.. நீ ஏன் ஒரு மாதிரியா பேசுற.."

"கொஞ்சம் கிளம்பி கோவிலுக்கு வா.. ரொம்ப urgent.."னு சிவா சொல்றான்.

சக்தி "கோவிலுக்கு வர சொல்றதுக்கு ஏன் இப்டி பதற்றமா பேசுறான்"னு யோசிச்சிட்டே போறா.

அங்க மதி வீட்டுக்கு தெரியாம விக்கிய கல்யாணம் பண்ணிக்கிற முடிவில இருந்தா.

சிவாவும் இன்னும் சில ப்ரெண்ட்ஸ்ம் "இப்டி கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்.. இரண்டு பேர் வீட்டிலயும் பேசலாம்.."னு சொல்லிட்டு இருந்தாங்க.

ஆனா மதி தன் முடிவை மாத்திக்கிறதா இல்லைங்கிறது சக்திக்கு புரிஞ்சது.

சக்தி அவளை சமாதானம் பண்ணமுடியுமா.. என்ன பேசலாம்னு யோசனைல நின்னுட்டு இருந்தா.

அந்த நேரம் மதியோட அப்பா அம்மா வந்தாங்க.

மதியோட அம்மா.. "மதி.. கொஞ்சம் புரிஞ்சுக்கோ..மா.. உனக்கு அப்புறம் ஒருத்தி இருக்கா.. நீ இப்டி பண்ணா.. அவ வாழ்க்கை என்னாகும் கொஞ்சம் யோசிச்சு பாரு மா.."னு கெஞ்சிட்டு இருந்தாங்க.

மதியோட அப்பாவும் அவகிட்ட பேசிட்டு இருந்தாங்க.

ஆனா அவங்க இரண்டு பேரையும் மீறி.. மதி விக்னேஷ கல்யாணம் பண்ணிக்கிறா.

அடியே.. அழகே..Where stories live. Discover now