சக்தி காலையில கண்முழிக்கும் போது.. அர்ஜூன் டேபிள்ல தலை வச்சு படுத்து தூங்கிட்டு இருக்கான்..
"இவன் ஏன் இப்டி தூங்குறான்.. கட்டில் நல்லா பெருசா தானே இருக்கு.. அந்தப் பக்கமா படுக்க வேண்டியதான.."னு சக்தி நினைக்கிறா..
எழுந்து போய் குளிச்சிட்டு.. வர்றா சக்தி..
கதவை யாரோ தட்டுறாங்க.. அந்த சத்தம் கேட்டு அர்ஜூன் முழிச்சிடுறான்.. சக்தியும் அர்ஜூனை பார்க்கிறா.
அர்ஜூன் கண்ணால சைகை காட்டிட்டு கட்டில்ல போய் படுத்துக்கிறான்.
சக்தி கதவை திறக்கிறா. இந்திரா நிக்கிறாங்க.
"அம்மு.. குளிச்சிட்டீயா.. நான் எழுப்பலாம்னு வந்தேன்.."னு இந்திரா சொல்றாங்க.
"அர்ஜூன் எங்க.."னு இந்திரா கேட்கிறாங்க..
"தூங்கிட்டு இருக்காங்க.."னு சக்தி சொல்றா.
"சரி.. நீ அவன்கிட்ட இன்னைக்கு கம்பெனிக்கு போகணும்.. அதனால சீக்கிரம் ரெடியாக சொல்லிட்டு கீழ வா.."னு சொல்லிட்டு இந்திரா போயிடுறாங்க.
"நான் அவன்கிட்ட சொல்லணுமா.. எப்டி சொல்றது.."னு சக்தி யோசிச்சிட்டே அர்ஜூனை பார்க்கிறா.
அர்ஜூன் குப்புறப்படுத்து இருக்கான். இவனை எப்டி எழுப்புறதுனு சக்தி கட்டில் கிட்ட வர்றா.
சக்தி எழுப்புறதுக்காக அர்ஜூனை தொடப்போறா.. அர்ஜூன் திடீர்னு எழுந்திட..சக்தி பயந்துடுறா.
என்ன.. என்பது போல அர்ஜூன் அவளை பார்க்கிறான்..
சக்தி.. "அம்மா.. கம்பெனிக்கு போகணும்னு சொல்லச் சொன்னாங்க.."னு சொல்றா.
சரினு தலையாட்டிட்டு எதுவும் பேசாம அர்ஜூன் எழுந்து குளிக்கப் போறான்.
சக்தி கீழே ஹாலுக்கு வர்றா. இந்திரா சக்தி கிட்ட.. "அம்மு.. உனக்கு டீயா காபியா.."னு கேட்கிறாங்க..
"அம்மா.. எனக்கு டீ.. ஆனா ஒரு கண்டீஷன்.."னு சக்தி சொல்றா..
"கண்டீஷனா.. என்ன அது.."னு இந்திரா சக்தியை பார்க்கிறாங்க.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..