உதய்
தனிமை துயர்தந்து
நினைவுகளில் அமிழ்த்தவும்
பேரின்பம் தந்து
கொள்ளை கொள்ளவும்
செய்யும் உன்னன்பின்
கரம் பிடித்து
நடை பயில்கிறது
என் அன்பு"யாரோ காதல் கவிதை லாம் பிடிக்காதுனு சொன்னாங்க.. அது யாருனு உனக்கு தெரியுமா உதய்.."
"அம்மு..😣😣"
"😊😊😊"
"இது காதல் மேல நம்பிக்கை இருந்த போது எழுதுனது அம்மு.."
"சரி.. சரி.. இப்ப ஏன் post பண்ண.."
"உன்கிட்ட பேச ஆரம்பிச்ச பிறகு என்னோட opinion கொஞ்ஞ்ஞ்சம் மாறிருக்கு.. அதான்.."
"ஆஹான்.. வேற எதாவது கவிதை சொல்லேன்.."
சிறகடிக்கும்
சிறுபிள்ளையென
குதூகலிக்கும் மனம்
உன் விரல்
கோர்க்கையில்.."Super👍👍"
"நீ எதாவது சொல்லு அம்மு.."
பாதம் பதித்து
நடைபயிலும்
சிறுபிள்ளையின்
குதூகலத்தோடு
உன் கரம் கோர்த்து
தூரம் அளந்திட வேண்டும்.."செம..👍👍"
இப்டியே இருவரின் பேச்சும் நீள்கிறது இரவெல்லாம்..
சக்தி பேசி முடிச்சிட்டு மணி பார்க்கும் போது மணி இரண்டு.. எப்பவும் இவ்ளோ நேரம் முழிச்சு இருக்கிற பழக்கம் கிடையாது சக்திக்கு..
ஆனா இப்டி இருக்கிறதும் பிடிச்சிருக்கு.. உதய் மேல இருக்கிறது.. நட்பு மட்டும் தானா..
சக்தி இதைப்பத்தி யோசிச்சிட்டே இருக்கா.
நிவேதாவும் நிரஞ்சனும் மறுவீடு அழைப்புக்காக வந்திருக்காங்க..
கீதாவும் சுந்தரமும் நிரஞ்சனை ரொம்ப ஸ்பெஷலா கவனிக்கிறாங்க..
சக்தி வழக்கத்துக்கு மாறா அமைதியா இருக்கா எதுவும் பேசாம..
"என்னாச்சு இவளுக்கு.. அமைதியா இருந்துட்டு வேற எதுவும் plan பண்றாளோ.."னு நிவேதா நினைக்கிறா.
நிரஞ்சனுக்கு கூட சக்தி அமைதியா இருக்கிறது வித்தியாசமா தான் தோணுது.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..