29💕

8.4K 302 20
                                    

அர்ஜூன் ஊருக்கு போய் இரண்டு நாளாச்சு. இன்னும் ஒரு போன் கூட பண்ணலை.

சக்தி குளிச்சிட்டு கண்ணாடி முன்னால நின்னு தலை துவட்டிட்டு இருக்கா.. கண்ணாடில தன்னையே பார்த்துட்டு இருந்த சக்தி.. அர்ஜூன் கொடுத்த அந்த முதல் முத்தத்தை நினைச்சு பார்க்கிறா.

வெட்கமும் சந்தோஷமும் வருது சக்திக்கு.. ஆனா அடுத்த நாள்.. அர்ஜூன் கிளம்பும் போது நடந்ததை யோசிச்சு பார்க்கிறா சக்தி.

"அம்மு.. மழையில நனையாத.. இந்த வீக் கம்பெனில வேலை எதுவும் இல்லை. நீ போக வேண்டாம்.. வீட்டில ரெஸ்ட் எடு.. நான் வெள்ளிக்கிழமை வரும்போது அப்பா அம்மா வீட்டில இல்லாத மாதிரி பார்த்துக்க.. நான் போன் பண்றேன்.."னு அர்ஜூன் சொன்னான்.. ஆனா எதையுமே சக்தி முகத்தை பார்த்தே பேசலை..

அது சக்திக்கு ஒரு மாதிரி இருந்துச்சு.. ஏன் திடீர்னு அர்ஜூன் இப்டி பண்றானு மனசில நினைப்பு ஓடிட்டே இருந்தது சக்திக்கு..

இரண்டு நாளா சக்தி மனசெல்லாம் இதே நினைப்பு தான்.. அர்ஜூன் கூட டின்னர் போனது.. அர்ஜூன் கிஸ் பண்ணது இதையெல்லாம் நினைச்சு ஒருபுறம் சந்தோஷமாகவும்.. கிளம்பும்போது ஏன் முகம் கொடுத்து கூட பேசலை.. இன்னும் ஒரு போன் கூட பண்ணலை..னு நினைச்சு அப்பப்ப வருத்தமாகவும் இரண்டு நாள் ஓடிடுச்சு.

சக்தி போனை எடுத்து.. அர்ஜூன் போட்டோவை பார்க்கிறா.. "உனக்கு கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா.. உன்னையே நினைச்சு.. எனக்கு தூக்கம் கூட வரமாட்டிக்குது.. ஆனா நீ இரண்டு நாளா எனக்கு ஒரு போன் கூட பண்ணலை.."னு சக்தி அர்ஜூன் போட்டோவை பார்த்து பேசிட்டு இருக்கா.

சக்தி அர்ஜூன் போட்டோவையே பார்த்தபடி இருக்க.. அப்ப அர்ஜூன் போன் பண்றான்.

"இப்பத்தான் என் நியாபகம் வருதா உனக்கு.."னு சொல்லிட்டு சக்தி போன் அட்டெண் பண்றா.

"ஹலோ.."

"ஹலோ அம்மு.."னு அர்ஜூன் சொன்னதும் சக்தி மனசில ஏதோ இனம்புரியா ஒரு சந்தோஷம் வருது..

அடியே.. அழகே..Where stories live. Discover now