16💕

7.6K 297 34
                                    

நிவேதாவும் நிரஞ்சனும் ஒரு வாரம் லீவு இருந்துச்சுனு வந்துருக்காங்க.

சக்தி ரொம்ப சந்தோஷமா இருக்கா. மூணுபேரும் சேர்ந்து எங்கயாவது வெளியே போகலாம்னு plan பண்றாங்க.

ஹோட்டலுக்கு போறாங்க. மூணுபேரும் சாப்பிட்டு முடிச்சதும் ஐஸ்கிரீம் சாப்பிடுறாங்க.

நிரஞ்சன்.. "நீங்க பேசிட்டு இருங்க.. நான் பில் pay பண்ணிட்டு.. அப்பா அம்மாவுக்கு பார்சல் வாங்கிட்டு வர்றேன்.."னு சொல்லிட்டு எழுந்து போறான்.

நிவேதாவும் சக்தியும் பேசிட்டு இருக்காங்க. அப்ப ஒரு குட்டிப் பொண்ணு.. chocobarஐ கையெல்லாம் வடிச்சிட்டே சாப்பிட்ட படி நடந்து வருது.

சக்தி அந்த குட்டி பாப்பாவை ரசிச்சிட்டு இருக்கா. எதிரில வந்த யார் மேலயோ இடிச்சிட்டு.. "அச்சோ.. சாரி.."னு நிமிர்ந்து பார்த்து சொல்லிட்டே அந்த பாப்பா மறுபடியும் மிச்சம் இருந்ததை சாப்பிடுது.

யார் மேல அந்த பாப்பா இடிச்சதுனு பார்த்தா.. அங்க அர்ஜீன்.. அந்த பாப்பாவை பார்த்து சிரிச்சிட்டு நிக்கிறான்.

அர்ஜீன் அந்த பாப்பாவ தூக்கி.. இன்னொரு ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்து.. "இங்க உட்கார்ந்து சாப்பிடணும்.. சரியா.."னு சொல்லி.. ஒரு சேர்ல உட்கார வைக்கிறான்.

சக்தி தன்னை அறியாம சிரிச்சபடி.. அர்ஜீனையும் அந்த பாப்பாவையும் பார்த்துட்டு இருக்கா.

அர்ஜீன் அந்த பாப்பா கிட்ட பேசி சிரிச்சிட்டே திரும்ப.. ஒரு நொடி அதே சிரிப்போட சக்தியை பார்த்தான். ஆனா அடுத்த நொடி அங்கிருந்து நகர்ந்து போயிடுறான்.

நிரஞ்சனும் வந்துட சக்தி வீட்டுக்கு கிளம்பிடுறா. ஆனா சக்தி மனசில அர்ஜீனோட சிரிப்பு நிறைஞ்சு இருக்கு.

ஏன்னு சக்திக்கே புரியலை.

வீட்டில சக்தியோட போனை எதுக்கோ எடுத்த நிவேதா.. "சக்தி.. என்ன facebook uninstall பண்ணிருக்க.."னு கேட்கிறா.

"அ.. அது.. ஒன்னுமில்லை.. ரொம்ப போர் அடிச்சுது.. அதான் uninstall பண்ணிட்டேன்.."னு சக்தி சொல்றா.

"நம்புற மாதிரி இல்லையே.."னு நிவேதா சொல்றா.

"சரி... என் செல்லாக் குட்டி எப்டி இருக்கு.."னு சக்தி கேட்கிறா.

"அது யாரு.."னு நிவேதா கேட்கிறா.

சக்தி தன் போனை எடுத்து.. நிரஞ்சனோட பாட்டி போட்டோவை காட்டுறா.

"பாட்டி.. நல்லா இருக்காங்க.. கல்யாண போட்டோஸ் பார்க்கும் போது நான் கூட சொன்னேன்.. பாட்டி நீங்களும் சக்தி கூட சேர்ந்து என்னை கிண்டல் பண்ணீங்கல்ல..னு அதுக்கு பாட்டி.. இனிமே தான் உன் தங்கச்சிக்கு கல்யாணம்.. அப்ப பாத்துக்கலாம்.. னு சொன்னாங்க.."னு நிவேதா சொல்றா.

"ஆஹான்.. அதையும் பாக்கலாம்.."னு சக்தி சொல்றா.

ஒரு வாரம் நிவேதாவும் நிரஞ்சனும் இருந்துட்டு கிளம்புறாங்க.

***

அர்ஜீன் கம்பெனில இருந்து வீட்டுக்கு வர்றான். இந்திரா அவனை கூப்பிடுறாங்க.

"என்னமா.."னு அர்ஜீன் கேட்கிறான்.

"அம்மாவும் நானும் ஒரு பொண்ணு பார்த்திருக்கோம் உனக்கு.."னு சரவணன் சொல்றார்.

அதைக் கேட்டதும் அர்ஜீன் எழுந்திருக்கிறான். "அர்ஜீன்.. உட்காரு.."னு இந்திரா அவனை உட்கார வைக்கிறாங்க.

"அர்ஜீன்.. ஒரே பையன் நீ எங்களுக்கு.. உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா.."னு இந்திரா கேட்கிறாங்க.

அர்ஜீன் எதுவும் பேசாம அமைதியா இருக்கான்.

"அர்ஜீன்.. எதுவும் பேசாம இருந்தா.. என்ன அர்த்தம்.. னு" சரவணன் கேட்கிறார்.

அர்ஜீன்.. "சரி உங்க விருப்பம்.. நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.."னு சொல்லிட்டு எழுந்து போறான்.

இந்திராவும் சரவணனும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.

அடியே.. அழகே..Where stories live. Discover now