அர்ஜூன் வீட்டில்..
கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு.. சக்தி அர்ஜூன் வீட்டுக்குள்ள தன்னோட வலது காலை எடுத்து வைச்சு வந்தாச்சு..
முதலிரவுக்கு அர்ஜூனோட அறை முழுக்க பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தயாரா இருக்கு.
சக்தி அர்ஜூனோட அறைக்குள்ள போறா. சக்தி மனசில.. "எவ்ளோ கனவோட இந்த நாளை எதிர்பார்த்திருப்பேன்.. ஏதோ கடனேனு போற மாதிரி மனநிலைல இருக்கேன் இப்ப.."னு நினைக்கிறா.
சக்திக்கு என்ன பேசுறதுனு எதுவும் தோணலை.. சக்தி அர்ஜூனை பார்க்கிறா.
அர்ஜூன் கோபமா இருக்கிற மாதிரி தோணுது.. ஆனா எதுக்குனு சக்திக்கு புரியலை.
சக்தி "ஏன் இவன் இப்ப கோபமா இருக்கான்.."னு மனசில நினைக்கும் போதே.. அர்ஜுன் பேச்சை தொடங்கிறான்..
"எனக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சங் கூட விருப்பமில்லை.. எங்க அம்மாவுக்காக தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்டேன்.. நீ உன் விருப்பம் போல இருந்துக்கோ.. ஆனா என்னோட மனைவிங்கிற உரிமைல என்னை நெருங்க நினைக்காத.."னு அர்ஜூன் சொல்லி முடிச்சிட்டு பால்கனிக்கு போயிடுறான்.
சக்தி ஓரளவுக்கு இது எதிர்பார்த்தது தான்.. ஒரு ஓரத்தில கொஞ்சோண்டு வருத்தம் இருந்தாலும்.. அதை பெரிசா எடுத்துக்காம தூங்கலாம்னு நினைக்கிறா.
கட்டில்ல.. heart shapeல ரோஸ் வச்சு டெக்கரேட் பண்ணிருக்காங்க.. சக்தி அது பக்கத்தில படுத்தபடி.. அந்த பூவை கையால தடவியபடி அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் யோசிக்கிறா.
"எவ்ளோ சந்தோஷமா இருந்த என்னை.. இப்டி கல்யாணம்னு சொல்லி.. எப்டி மாத்திட்டாங்க..
ஆனா வேற வழியில்லை.. இனிமே இத ஏத்துக்கிட்டு தான் ஆகணும்..
அர்ஜூனுக்கு ஏன் என்னை பிடிக்கலை.. சரி எதுவா இருந்தாலும் அது மாறும்.."னு சக்தி தனக்கு தானே சமாதானம் சொல்லிட்டு இருக்கா.
நிரஞ்சனோட பாட்டி கிட்ட ஆசிர்வாதம் வாங்கும் போது.. பாட்டி அர்ஜூன் கிட்ட.. "உன்னை நினைச்சா கொஞ்சம் பாவமா தான் இருக்கு.. நீ இவளை என்ன வேணாலும் செய்ய சொல்லு.. ஆனா மறந்து கூட பாட சொல்லிடாத.. அவ்ளோ சூப்பரா பாடுவா.."னு சொல்றாங்க.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..