47💕

19K 503 233
                                    

சக்தி அர்ஜூனோட வாழ்க்கை கொஞ்சல் கெஞ்சல்னு சந்தோஷமா போய்ட்டு இருந்துச்சு.

சக்தி அர்ஜூன் இந்திரா சரவணன் எல்லாரும் ப்ரீத்தி விமல் கல்யாணத்துக்கு போறதுக்காக கிளம்பிட்டு இருந்தாங்க.

சக்தியும் அர்ஜூனும் ரூம்ல இருந்தாங்க.

"அம்மு இங்க வா.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தியும் அர்ஜூன் பக்கத்தில வந்து நிக்க.. "அம்மு.. இந்த ஜிமிக்கி நல்லாருக்கு.."னு அர்ஜூன் சொல்றான்.

சக்தி சிரிச்சிட்டே தலையை ஆட்டியபடி.. "நல்லா இருக்குல்ல.."னு சொல்றா.

"அர்ஜூன்.. என்ன கிப்ட் வாங்கி வச்சிருக்க.."னு சக்தி கேட்கிறா.

"அது சஸ்பென்ஸ்.."னு அர்ஜூன் சொல்ல.. சக்தி முறைக்கிறா.

"வாங்க மேடம்.. போகலாம்.. அப்புறம் வந்து முறைங்க.."னு அர்ஜூன் கிண்டல் பண்றான்.

ரிஜிஸ்டர் ஆபிஸ்ல சிம்பிளா கல்யாணம் பண்ணிகிட்டாங்க.. ப்ரீத்தியும் விமலும். விமலுக்கு அப்பா அம்மா இல்லை.. ப்ரீத்தியோட அம்மா.. இந்திரா சரவணன்.. அர்ஜூன் சக்தி மட்டும் தான் கல்யாணத்துல கலந்துகிட்டாங்க..

கல்யாணம் முடிஞ்சதும்.. ப்ரீத்தியோட அம்மாகிட்டயும் இந்திரா சரவணன் கிட்டயும் இரண்டு பேரும் ஆசிர்வாதம் வாங்குறாங்க.

சக்தியும் அர்ஜூனும் சேர்ந்து கிப்ட்டை கொடுக்கிறாங்க.

"இதெல்லாம் எதுக்கு அர்ஜூன்.."னு ப்ரீத்தியோட அம்மா சொல்றாங்க.

அர்ஜூன்.. விமலையும் ப்ரீத்தியையும் பார்த்து.. "கிப்ட்டை ஓபன் பண்ணுங்க.."னு சொல்றான்.

ப்ரீத்தியோட வீட்டு பத்திரம் கிப்ட் பாக்ஸ்ல இருந்துச்சு.. அந்த வீட்டை திரும்ப வாங்கி அதை கிப்ட்டா கொடுத்திருந்தான் அர்ஜூன்..

விமலும் ப்ரீத்தியும் அதை பார்த்துட்டு.. வேண்டாம்னு சொல்றாங்க. ஆனா அர்ஜூன் அவங்களை சமாதானம் பண்ணி அவங்ககிட்ட அதை கொடுக்கிறான்.

நைட் அர்ஜூன் பால்கனில ஊஞ்சல்ல உட்கார்ந்து தன்னோட போன்ல மெயில் செக் பண்ணிட்டு இருந்தான்.

அடியே.. அழகே..Where stories live. Discover now