3💕

9.5K 317 22
                                    

Facebook notification..

சக்தி தன் போனை ஆன் பண்ணதும்..

அப்பதான் நியாபகம் வருது.. நேத்து உதய்க்கு ரிப்ளை பண்ணவே இல்லைனு.

உதய் கிட்ட இருந்து friend request.. ஒரு கமெண்ட்.. "sry.. நான் வேற ஒரு டென்ஷன்ல இருந்தேன்.. அதான் அப்டி ரிப்ளை பண்ணிட்டேன்.."னு இருந்துச்சு.

சக்தி ப்ரெண்ட் request accept பண்ணிட்டு ஆபிஸ்ல இருந்து கிளம்புறா.

சக்தி வீட்டில..

சுந்தரம் நிவேதாகிட்ட.. நிரஞ்சன் பத்தி சொல்லி பொண்ணு பார்க்க வர சொல்லலாமானு கேட்கிறார்.

நிரஞ்சன் போட்டோ பார்த்துட்டு நிவேதாவும் சரினு சொல்றா. கீதாவும் சுந்தரமும் சந்தோஷமா இருக்காங்க.

"என்ன எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க.."னு சக்தி கேட்டுட்டே வர்றா.

சுந்தரம்..  "நிவேதாவுக்கு ஒரு வரன் வந்திருக்கு.. அவளுக்கும் மாப்பிள்ளையை பிடிச்சிருக்கு.."னு சொல்றார்.

"அப்பாடா.."னு சக்தி சொல்றா.

எல்லாரும் எதுக்கு இப்டி சொல்றானு அவளை பார்க்கிறாங்க.

சக்தி அதுக்கு.. "உன் தொல்லை இனி இல்லை.. என் ரூட்டு க்ளீயர்.."னு சொல்றா.

"நான் உனக்கு தொல்லையா.."னு நிவேதா சக்தியை முறைக்கிறா.

"ஆமா நிவி.. இப்ப நான் லவ்வரை கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்றேனு வச்சுக்கோ.. இந்த கீதா என்ன சொல்லும்.. உன் அக்கா இருக்கும் போது உனக்கு என்ன அவசரம்.. இப்ப அது இல்லைல.."னு சக்தி சொல்லவும் எல்லாரும் அதிர்ச்சியா பார்க்கிறாங்க.

"சக்தி மா என்ன இதெல்லாம்.. யார் அந்த பையன்.."னு சுந்தரம் கேட்கிறார்.

"சும்மா சொன்னேன் பா.. உங்ககிட்ட சொல்லாம இருப்பேனா.."னு சக்தி சொல்றா.

"அப்பா.. இவளை நம்பாதீங்க.."னு நிவேதா சொல்றா.

"ஆமா எனக்கு கூட டவுட்டா தான் இருக்கு.."னு கீதா சொல்றாங்க.

"என்ன கீதா.. என்னை பார்த்து.. இப்டி சொல்றீயே.."னு சக்தி கண்ணை கசக்குறா.

"ஏ.. ப்ராடு.. நடிக்காத.."னு சொல்லி கீதா அவளை அடிக்கிறாங்க.

நிவேதா ஒரு டம்ளர் தண்ணீரை சக்தி மேல ஊத்திட்டு.. "என்னை தொல்லைனு சொன்னல்ல.. அதுக்கு தான்.."னு சொல்றா.

"நிவி.. இட்ஸ் டூ பேட்.. பாருங்க பா.."னு சக்தி சொல்லிட்டு அவளும் தண்ணீரை எடுக்கிறா.

ஆனா நிவேதா மேல ஊத்தாம கீதா மேல ஊத்துறா.

"கழுதை.. என் மேல ஏண்டி ஊத்துன.."னு கீதா கேட்கிறாங்க

"இது நீ என்னை அடிச்சதுக்கு கீதா.. அடுத்தது உன் பொண்ணுக்கு.."னு சொல்லிட்டு சக்தி திரும்ப நிவேதா அலர்ட் ஆகி ரூமுக்குள்ள ஓடுறா.

அத கவனிச்சிட்டு சக்தி அவளை துரத்திட்டு ஓடுறா.

சுந்தரம் தன் பொண்ணுங்க பண்ற சேட்டையை பார்த்து ரசிச்சிட்டு இருக்கார்.

இந்த விளையாட்டுல சக்தி மாப்பிள்ளை போட்டோவ பார்க்கவே மறந்துடுறா.

நைட் படுக்க போகும்போது facebook open பண்றா.

அப்ப உதய்கிட்ட இருந்து மெசேஜ் வந்திருக்கு.

Hi Ammu..

சக்தி Facebookல கவிதை எழுதுறது அம்மு..ன்ற பேர்ல.

சக்தியும் Hi Uday..னு  ரிப்ளை பண்றா.

"சாரி நான் நேத்து அப்டி பேசுனதுக்கு.."னு உதய் சொல்றான்.

"Leave it.. நான் அதை அப்பவே மறந்துட்டேன்.."னு சக்தி சொல்றா.

இரண்டு பேரும் கொஞ்ச நேரம் அந்தக் கவிதை நல்லா இருந்துச்சு..னு மாத்தி மாத்தி பேசிட்டு இருக்காங்க.

அப்புறம் gud ni8 சொல்லிட்டு படுக்கிறா சக்தி. ஏனோ உதய் கிட்ட பேசுனது சக்திக்கு சந்தோஷமா இருந்துச்சு.

அடியே.. அழகே..Where stories live. Discover now