24💕

8.2K 312 22
                                    


அர்ஜூன் கண் முழிச்சு பார்க்கிறான். சக்தி குளிச்சிட்டு தலை துவட்டிட்டு இருக்கா..

சக்தி ரூம்ல இருந்து வெளியே போறா. சக்தி வீட்டில இருந்து ஒரு வாரத்துல வந்துட்டாங்க.

ஹனிமூன் எங்க போறீங்கனு கேட்டதுக்கு இரண்டு பேருமே வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இந்திரா சக்தி கிட்ட எவ்வளவோ பேசி பார்த்தாங்க.. ஆனா சக்தி வேண்டாம்னு சொல்லிட்டா.

ஒரு வாரமா சக்தியும் அர்ஜூனும் கம்பெனிக்கு போறாங்க. இரண்டு பேருக்கும் ஒரே கேபின் அரேஞ்ச் பண்ணிருந்தாங்க.. முத நாள் இரண்டு பேருக்குமே அது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.

ஆனா வேலையில இரண்டு பேரும் கவனம் செலுத்துனதால அது பெரிய விஷயமா தெரியலை.

சக்திக்கும் வேலை சம்பந்தமா வர்ற சந்தேகம் தீர அர்ஜூன் பக்கத்திலே இருக்கிறது உதவியா இருந்துச்சு.

இரண்டு பேரும் கொஞ்சம் இயல்பா பேசிக்க ஆரம்பிச்சாங்க. தங்களோட சொந்த விஷயங்களை பேசிக்கலைனாலும்.. இயல்பா பேசிக்க ஆரம்பிச்சிருந்தாங்க.

அர்ஜூன் சக்தி வீட்டில இருந்து வந்த இந்த ஒரு வாரத்துல ரொம்ப மிஸ் பண்ணதுனா.. தினம் காலையில சக்தி அவன் தோள்ல தலை வச்சு படுக்கிறது தான்.

ஏனோ அவனை அறியாமலே அதுக்கு மனசு ஏங்குச்சு. சக்தி கொஞ்ச கொஞ்சமா அர்ஜூனுக்கு நெருக்கமாகிட்டு இருந்தா மனசளவில.

அர்ஜூன் எழுந்து குளிக்கப் போறான்.

அர்ஜூனோட ப்ரெண்ட் கார்த்தி வந்திருந்தான். அவன்கிட்ட எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க.

இந்திரா.. "இப்ப தான்.. உனக்கு பாதை தெரிஞ்சுதா இங்க வர.."னு கேட்கிறாங்க.

அதுக்கு கார்த்தி.. "பாதை லாம் ஏற்கனவே தெரியும் மா.. ஆனா நேரம் தான் இல்லை.. இன்னைக்கு கொஞ்சம் ப்ரீ அதான் உங்க கையால சாப்பிடலாம்னு கிளம்பி வந்துட்டேன்.."னு சொல்றான்.

"சோ சேட்.. இன்னைக்கு அம்மா சமையல் கிடையாது.. நான் தான் சமைப்பேன்.."னு சக்தி சொல்றா.

அடியே.. அழகே..Where stories live. Discover now