7💕

8.5K 305 29
                                    


சக்தி தன் வீட்டு முன்னாடி பைக்க நிறுத்திட்டு "இதான் நிவேதா வீடு.."னு சொல்றா.

நிரஞ்சன்.. "நான் கேட்டதுக்கு இன்னும் நீங்க பதில் சொல்லலையே.."னு சக்தியை பார்த்து கேட்கிறான்.

சக்தி நிரஞ்சனை பார்த்து சிரிச்சிட்டே.. "உங்க பாட்டி சொன்ன.. that காது வரைக்கும் வாய் நீளுற அந்தப் பொண்ணு நான் தான்.."னு சொல்றா.

"அப்ப என்னை தெரிஞ்சுகிட்டே தான் யாரோ மாதிரி பேசுனீங்களா.."

"நான் உங்க போட்டோ லாம் பாக்கலை.. but.. நீங்க பேச ஆரம்பிச்சதுமே guess பண்ணிட்டேன்.."னு சக்தி சொல்றா.

"உங்ககிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும் போல.."னு நிரஞ்சன் சொல்றான்.

சக்தி சிரிச்சிட்டே.. "உள்ள வாங்க.."னு கூப்பிடுறா.

சக்தி வீட்டுக்குள்ள வர்றதை பார்த்ததும் நிவேதா.. "எங்கடி நான் கேட்டது.."னு கேட்கிறா.

சக்தி கையில இருக்கிற கவரை காட்டுறா. நிவேதா சிரிச்சிட்டே அதை வாங்கப் போறா.

ஆனா சக்தி கொடுக்காம.. "இது எனக்கு.. நீ உன் ஆள்கிட்ட வாங்கிக்கோ.."னு சொல்றா.

அப்பதான் நிவேதா.. நிரஞ்சன் வர்றதை கவனிக்கிறா.

நிவேதா நிரஞ்சனை பார்த்து.. "வாங்க.. உட்காருங்க.."னு சொல்றா.

நிரஞ்சன் கவரை நிவேதா கிட்ட கொடுத்துட்டு.. "உங்களுக்கு பிடிக்கும்னு உங்க சிஸ்டர் சொன்னாங்க.."னு சொல்றான்.

சக்தி கிச்சனுக்குள்ள போயிடுறா நிரஞ்சன் வந்ததும்.. கீதா கிட்ட போய்.. "கீதா நீ இங்க என்ன பண்ணணிட்டு இருக்க.."னு கேட்கிறா.

"டீ போடுறேன்.. உனக்கு வேணுமா.."னு கீதா கேட்கிறாங்க.

"நீ இங்க டீ போடுற.. அங்க உன் பொண்ணு கடலை போடுறா.."னு சக்தி சொல்றா.

"என்னடி உளறுற.."னு கீதா அவளை முறைக்கிறாங்க.

"என் மேல நம்பிக்கை இல்லைனா.. நீயே போய் பாரு.."னு சக்தி சொல்றா.

கீதா ஹாலுக்கு வர்றாங்க. அங்க நிரஞ்சனும் நிவேதாவும் பேசிட்டு இருக்கிறத பார்த்துட்டு.. நிரஞ்சன் கிட்ட பேசுறாங்க.

அடியே.. அழகே..Where stories live. Discover now