அர்ஜூன் சக்தியோட பதிலை எதிர்பார்த்து.. அவளை பார்த்தபடி நிக்கிறான்.
சக்தி இதை எதிர்பார்க்காததால.. உறைஞ்சு போய்.. எதுவும் பேசாம நின்னுட்டு இருந்தா.
"அம்மு.."னு அர்ஜூன் கூப்பிடுறான்.
அர்ஜூன் தன்னோட பதிலுக்காக தான் காத்திருக்கான்னு அப்பதான் புரியுது.
"அ.. அ.. அர்ஜூன்.."னு சக்தி தடுமாறுறா. மனசில இருக்கிறத சொல்ல நினைக்கிறா. ஆனா சொல்ல முடியலை எதிர்பாராத நேரத்துல எதிர்பார்க்காத சந்தோஷத்துல..
அர்ஜூனுக்கு சக்தி மனசில இருக்கிறது புரிஞ்சிடுச்சு.. இருந்தாலும் சக்தி கிட்ட விளையாடுறான்.
"அம்மு.. நீ இப்பவே சொல்லணும்னு அவசியம் இல்லை.. நல்லா யோசிச்சு சொல்லு.. குட் நைட்.."னு அர்ஜூன் சொல்லிட்டு போய் படுத்துக்கிறான்.
"அச்சோ.. அர்ஜூன் கிட்ட சொல்லு சக்தி.. இப்பவே சொல்லு.. உன் மனசில இருக்கிறத சொல்லு.. போ சக்தி.."னு சக்தி தனக்குள்ளே பேசிட்டு இருக்கா.
சக்தி அர்ஜூன் கிட்ட போய் பார்க்கிறா. அர்ஜூன் தூங்கிட்ட மாதிரி படுத்திருக்கான்.
"அதுக்குள்ள தூங்கிட்டானா.. இப்ப தான படுத்தான்.."னு யோசிச்சபடி சக்தி அவன் பக்கத்தில உட்கார்ந்து அவனையே பார்த்துட்டு இருக்கா.
கொஞ்ச நேரங் கழிச்சு.. அர்ஜூன் தூங்கிட்டான்னு நினைச்சு.. சக்தி புலம்ப ஆரம்பிக்கிறா.
"உனக்கு அதுக்குள்ள என்ன தூக்கம் வேண்டியிருக்கு.. நானும் சொல்லிருப்பேன்ல.. ஐ லவ் யூ..னு.. திடீர்னு நீ ஐ லவ் யூ சொல்லுவனு எனக்கெப்படி தெரியும்.."னு எங்கையோ பார்த்து பேசிட்டு இருக்கா சக்தி.
"ஆமா எப்டி தெரியும்.. பாவம்.. ப்ச்ச்.."னு அர்ஜூன் சொல்றான்.
சக்தி திரும்பி பார்த்து.. "நீ இன்னும் தூங்கலையா.."னு சொல்லிட்டு.. அவனை அடிக்க வர்றா.
அர்ஜூன் அவளை இழுத்து தன் மேலே சாய்த்து.. "ஐ லவ் யூ அம்மு.."னு சொல்றான்.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..