நிவேதாவை பொண்ணு பார்க்க வர்றாங்க.நிரஞ்சனோட பாட்டி லட்சுமி, அப்பா ராமகிருஷ்ணன், அம்மா ஜானகி, தங்கச்சி நிலா எல்லாரும் வந்திருக்காங்க.
நிரஞ்சன் மட்டும் வரலை.
"மாப்பிள்ளை வரலையா.."னு சுந்தரம் கேட்கிறார்.
"நாளைக்கு தான் புனேயில இருந்து வர்றான். அதுக்கு முன்னாடி நாங்கலாம் ஒரு தடவை பொண்ண பாத்துடலாம்னு வந்தோம்.."னு ராமகிருஷ்ணன் சொல்றார்.
நிவேதாவ கூப்பிட்டு உட்கார சொல்றாங்க கீதா.
"இவ தான் என் மூத்த பொண்ணு நிவேதா.."னு சுந்தரம் சொல்றார்.
நிலா வந்து நிவேதா பக்கத்தில உட்கார்றா.
"அம்மா.. அண்ணி ரொம்ப அழகா இருக்காங்கல்ல.. நிரஞ்சன் நிவேதா பேர் பொருத்தம் கூட நல்லா இருக்குல்ல மா.."னு சொல்றா நிலா.
ராமகிருஷ்ணனுக்கும் ஜானகிக்கும் நிவேதாவ பிடிச்சிருக்கு.
"பொண்ணு என்ன படிச்சிருக்கா.."னு ஜானகி கேட்கிறாங்க.
"அவ பி.எஸ்ஸி முடிச்சிட்டு இங்க ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வேலை பார்க்கிறா.."னு சுந்தரம் சொல்றார்.
"ஏன் இதெல்லாம் அவ வாயை திறந்து சொல்ல மாட்டாளா.."னு பாட்டி சொல்றாங்க.
அவங்க அதிகாரமா சொன்ன தோரணைல நிவேதாவுக்கு கொஞ்சம் பதற்றமா இருக்கு.
சக்தி வீட்டுக்கு வரும்போது கரெக்டா பாட்டி சொன்னது தான் காதில விழுந்துச்சு. கொஞ்சம் கடுப்பாகுது சக்திக்கு.
சக்தி வந்ததும்.. சுந்தரம்.. "இவ தான் என் ரெண்டாவது பொண்ணு சக்தி.."னு சொல்றார்.
எல்லாருக்கும் வணக்கம் சொல்லிட்டு நிவேதா கிட்ட உட்கார்றா சக்தி. நிலா சக்தியை பார்த்து சிரிக்கிறா. சக்தியும் பதிலுக்கு சிரிக்கிறா.
ஆனா பாட்டியை பார்த்ததும் சக்தி இவங்களை என்ன பண்ணலாங்கிற மாதிரி பார்க்கிறா.
பாட்டி நிவேதாவை பார்த்து.. "உனக்கு சமைக்க தெரியுமா.."னு கேட்கிறாங்க.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..