30💕

8.1K 299 41
                                    

இந்திராவும் சரவணனும் அர்ஜூன் கொடுத்த டிரெஸ்ஸை மாத்திட்டு வர்றாங்க.

அர்ஜூன் அவங்க இரண்டு பேர் கையிலயும் மாலையை கொடுத்து.. "மாலை மாத்திக்கோங்க.."னு சொல்றான்.

"அர்ஜூன்.. எதுக்கு இதெல்லாம் வேண்டாம்.."னு இரண்டு பேரும் சொல்றாங்க.

அர்ஜூனும் சக்தியும் சொல்ல.. சரினு சொல்லி மாலை மாத்திக்கிறாங்க.

அவங்க மாலை மாத்திக்கிட்டதும்.. அர்ஜூன்.. "ம்.. பொண்ணும் மாப்பிள்ளையும் மாலை மாத்தியாச்சு.. பெரியவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க.."னு சொல்றான்.

"டேய்.. உதை படுவ.."னு இந்திரா சொல்றாங்க.

"ம்மா.. நான் எங்களை சொல்லலை.. அங்க பாருங்க.."னு அர்ஜூன் சொல்றான்.

அர்ஜூன் கைகாட்டினதும் இந்திராவும் சரவணனும் திரும்பி பார்க்கிறாங்க.

இந்திராவோட அப்பா ரத்தினம் அங்க நின்னுட்டு இருக்கார். அவரை பார்த்ததும் இந்திராவும் சரவணனும் கண் கலங்கிடுறாங்க.

அவர்கிட்ட இந்திராவும் சரவணனும் ஆசிர்வாதம் வாங்குறாங்க. அவரும் அவங்கள பார்த்த சந்தோஷத்தில கண்கலங்கிடுறார்.

"போதும்.. எல்லாரும் கண்ணீர் விடாதீங்க.. கஷ்டமா இருக்கு.."னு வராத கண்ணீரை துடைக்கிறா சக்தி.

அர்ஜூனும் சக்தியும் அவங்களை கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு நிக்கிறாங்க.

ரத்தினம்.. சக்தியை பார்த்து.. "என் பேரனுக்கேத்த பொண்ணு தான் நீ.."னு சொல்றார்.

இந்திரா.. "அப்பா.. எங்கள மன்னிச்சிட்டீங்களா.."னு கேட்கிறாங்க.

"மன்னிக்கலைனா என் பேரன் சும்மா விடமாட்டானே.."னு சொல்றார் அர்ஜூனை பார்த்தபடி.

இந்திராவும் சரவணனும் அர்ஜூன் கொடுத்த சர்ப்ரைஸால சந்தோஷமா இருக்காங்க.

சக்தியும் அர்ஜூனும் சேர்ந்து அவங்கள கிண்டல் பண்ணிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.

அடியே.. அழகே..Where stories live. Discover now