சக்தியும் அர்ஜூனும் ஒருவழியா தங்களோட சண்டையை கொஞ்சல்ல முடிச்சிட்டு.. கிளம்பி கீழ வர்றாங்க.இந்திராவும் சரவணனும் அவங்க இரண்டு பேரும் வந்ததும் சாப்பிடலாம்னு காத்திருந்தாங்க.
அர்ஜூனும் சக்தியும் வந்ததும் எல்லாரும் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுறாங்க.
இந்திராவும் சக்தியும் வழக்கம் போல.. அவங்க கதை பேசிட்டு இருக்காங்க..
சாப்பிட்டு முடிச்சதும் அர்ஜூன் இந்திரா கிட்டயும் சரவணன் கிட்டயும் ப்ரீத்தியோட அம்மா பத்தி சொல்றான்.
"நாளைக்கு அவங்களுக்கு சர்ஜரி பண்றாங்க.."னு அர்ஜூன் சொல்றான்.
"சரி.. அப்ப நானும் அம்மாவும் ஹாஸ்பிட்டல்ல போய் அவங்கள பார்த்துக்கிறோம்.. நீங்க இரண்டு பேரும் கம்பெனிக்கு போங்க.."னு சரவணன் அர்ஜூன் கிட்ட சொல்றார்.
"ம்.. சரி ப்பா.."னு அர்ஜூன் சொல்றான்.
அர்ஜூனும் சக்தியும் வேலை பார்த்துட்டு இருக்காங்க. அப்ப சக்திக்கு கீதா போன் பண்றாங்க.
"ஹலோ சக்தி.."
"ஆங்.. சொல்லு.. ம்மா.."னு சக்தி சொல்றா.
"என்ன மரியாதை லாம் பலமா இருக்கு.. பேசுறது என் பொண்ணு தானா.."னு கீதா கிண்டல் பண்றாங்க.
"கீதா.. சரியில்லை.. இந்த சக்தி வீட்டில இல்லாம உனக்கு பயமே இல்லாம போச்சு.. வீட்டுக்கு வந்து உன்னை கவனிச்சுக்கிறேன்.."னு சக்தி போன்ல கீதா கிட்ட பேசுறத கேட்டு அர்ஜூன் சிரிக்கிறான்.
சக்தியும் அர்ஜூன் சிரிக்கிறதை கவனிச்சிட்டே கீதா கூட போன்ல பேசிட்டு இருக்கா.
"சக்தி மா.. நீயும் மாப்பிள்ளையும் எப்ப ப்ரீயா இருப்பீங்க.."னு கீதா கேட்கிறாங்க.
"எதுக்கு கீதா.."னு சக்தி கேட்கிறா.
"தீபாவளி வரப்போகுதுல.. உனக்கும் மாப்பிள்ளைக்கும் டிரெஸ் எடுக்க.. நீங்களும் வந்தா.. உங்களுக்கு பிடிச்ச மாதிரி எடுத்துக்கலாம்ல.. அதான்.."னு கீதா சொல்றாங்க.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..