அர்ஜூன் ரூம்ல சக்தி.. அம்மு.. மெசேஜ் பண்ணதை பத்தி யோசிச்சிட்டு இருக்கான்..
"ஒரு வேளை.. எனக்கு அம்முவை பிடிச்சிருந்த மாதிரி.. அவளுக்கும் என்னை பிடிச்சிருக்குமோ.."னு அர்ஜூன் யோசிக்கிறான்.
"ஏமாத்திட்ட..னு ஏன் சொல்லணும்.. நான் தப்பா எதுவும் பேசினது இல்லையே.. ஒரு வேளை உதய் போட்டோ பார்த்து.. மனசில ஆசையை வளர்த்திருப்பாளோ.. அதான் அப்டி சொல்றா போல.. சரி இப்ப இதை சக்தி கிட்ட சொல்லிடலாம்.. அவளுக்கு அப்புறமா புரிய வைக்கலாம்.."னு அர்ஜூன் நினைக்கிறான்.
சக்தி அர்ஜூன் யோசிக்கிறத பார்த்துட்டு.. நல்லா குழப்பி விட்டுட்டேன் போல..னு மனசுக்குள்ள சிரிச்சுக்கிறா.
அர்ஜூன் சக்தி கிட்ட அம்மு பத்தி சொல்லலாம்னு.. "அம்மு.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"னு சொல்றான்.
சக்தி கட்டில்ல படுத்துட்டு.. "அர்ஜூன்.. ரொம்ப டயர்டா இருக்கு.. நாளைக்கு பேசலாம்.."னு சொல்லிட்டு படுத்துக்கிறா.
"அம்மு.. ஒரு அஞ்சு நிமிஷம் தான்.. கேளு நான் சொல்றதை.."னு சொல்றான்.
"தூக்கம் வருது.. அர்ஜூன்.."னு சிணுங்குறா சக்தி.
அர்ஜூனும்.. சரி காலையில பேசிக்கலாம் னு படுக்கிறான்.
அர்ஜூன் தூங்கினதும் சக்தி கண் முழிச்சு பார்க்கிறா..
"சாரி அர்ஜூன்.. இல்லை.. உனக்கு சாரிலாம் கிடையாது.. நீ தான் என்கிட்ட பேசினதுனு தெரியாம.. உதய் கிட்ட நான் பேசினதா நினைச்சிட்டு.. எவ்ளோ குழம்புனேன் தெரியுமா.. அதுக்கு தான் உனக்கு இந்த punishment.."னு சக்தி மனசுக்குள்ள சொல்லிட்டு அர்ஜூனை கட்டிப்பிடிச்சு தூங்குறா.
அடுத்த நாள்..
பிரபாவும் ஶ்ரீயும் வீட்டுக்கு வர்றாங்க. சக்தி பாப்பாவை தூக்கி கொஞ்சிட்டு இருக்கா.
அர்ஜூன் அவங்க கிட்ட.. "அப்பா அம்மாவ பார்க்க எப்ப கிளம்புறீங்க.."னு கேட்கிறான்.
பிரபா.. "இன்னைக்கு சாயந்திரம் டா.."னு சொல்றான்.
சக்தி பாப்பா கிட்ட.. "தாத்தா பாட்டியை பார்க்க போறீங்களா.."னு கேட்டுட்டு இருக்கா..
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..