அர்ஜூன் தான் சக்தியை ரூம்ல இருந்து கூப்பிடுறான்.. அம்முன்னு..
சக்தி.. "அர்ஜூன் தான் அம்முன்னு கூப்பிடுறானா.."னு ஆச்சரியமா ரூமை பார்க்கிறா.
இந்திரா டீ எடுத்துட்டு வர்றாங்க.. "சக்தி மா.. உன்னைத் தேட ஆரம்பிச்சிட்டான்.. இந்தா டீ.. இரண்டு பேருக்கும் இருக்கு.. ரூமுக்கு எடுத்துட்டுப் போ.."னு சொல்றாங்க.
சக்தி எதுவும் பேசாம டீயை வாங்கிட்டு ரூமுக்கு போறா.
அர்ஜூன் கட்டில்ல படுத்திருந்தான். சக்தியை பார்த்ததும்.. "அம்மு..எப்ப எழுந்திருச்ச.."னு அர்ஜூன் கேட்கிறான்.
"இ.. இப்பதான்.."னு சக்தி சொல்றா.
"டீயா எடுத்துட்டு வந்திருக்க.."
"ம்.."
"சரி வா டீ குடிக்கலாம்.."னு சொல்லி.. பால்கனில உள்ள ஊஞ்சல்ல போய் உட்கார்றான்.
சக்தி ஏதோ யோசனைல நின்னுட்டு இருக்கா.
"அம்மு.. வா.. டீ ஆறிடப் போகுது.."னு அர்ஜூன் சொல்றான்.
சக்தி அர்ஜூன் கிட்ட.. "அம்முன்னு ஏன் கூப்பிடுற.."னு கேட்கிறா.
"அம்மா ஏன் அம்முன்னு கூப்பிடுறாங்க.."
"தெரியாது.."
"தெரியாதா.. இவ்ளோ நாள்ல ஒரு தடவை கூட அம்மாகிட்ட நீ இதை கேட்கவே இல்லையா.."
"இல்லை.. அம்மா என்னை சின்னக் குழந்தைல பார்த்த போதே அம்முன்னு தான் கூப்பிட்டாங்க.."னு சக்தி சொல்றா.
"அப்பக் கூப்பிட்டது உனக்கு இன்னும் நியாபகம் இருக்கா.."னு அர்ஜூன் கேட்கிறான்.
"இல்லை.. ஆனா அப்பா அடிக்கடி சொல்லிருக்காங்க.."
"அம்மா கிட்ட ஏன் அப்டி கூப்பிடுறாங்க.. னு கேட்க தோணுணதே இல்லையா.."
இல்லைனு சக்தி சொல்றா.
"அம்மா ப்ரெக்ணென்ட்டா இருந்தப்ப.. என்ன பேர் வைக்கலாம்னு அப்பாவும் அம்மாவும் யோசிச்சாங்களாம்.." னு அர்ஜூன் சொல்ல.. சக்தி ஏதோ கதை கேட்கிற சின்னக் குழந்தை மாதிரி அர்ஜூனை பார்த்துட்டே அவன் சொல்றதை கேட்டுட்டு இருக்கா.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..