அர்ஜூன் வீட்டுக்கு வரவேயில்லை.. ரொம்ப நேரமாச்சு..
இந்திரா ரொம்ப டயர்டா இருந்தாங்க.. "அம்மு.. நீ கார்த்திக்கு போன் பண்ணு.. அர்ஜூன் அவன்கூடதான் இருப்பான்.. எனக்கு ரொம்ப தூக்கம் வருது.."னு சொல்லிட்டு எழுந்து போறாங்க.
"சரி.."னு சொல்லிட்டு சக்தி கார்த்திக்கு போன் பண்றா.
கார்த்தி.. "அர்ஜூன் என் கூட இல்லையே மா.. சரி நான் பார்த்துட்டு போன் பண்றேன்.."னு சொல்றான்.
சக்தி ஹால்ல சோபால உட்கார்ந்து வெயிட் பண்றா.
கார்த்தி அர்ஜூன் போற இடத்துக்கு எல்லாம் தேடிப்போறான்.. எங்கையுமே இல்லை..
ஒரு வேளை அங்க போயிருப்பானோ.. னு சொல்லிட்டு கார்த்தி அந்த இடத்துக்கு போறான்.
அர்ஜூன் அங்க தான் இருந்தான். அது அர்ஜூன் உதய் கார்த்தி மூணுபேரும் அடிக்கடி மீட் பண்ற ஸ்பெஷல் place..
கார்த்தி.. "அர்ஜூன்.. ஏன் இப்டி பண்ற.. இங்க எதுக்கு வந்த.. சக்தி அங்க வெயிட் பண்ணிட்டு இருக்கா.. வா.."னு சொல்றான்.
"கார்த்தி.. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் டா.."னு அர்ஜூன் புலம்புறான்.
"அர்ஜூன்.. என்னாச்சு.. என்ன தப்பு பண்ண.. சொல்லு.."னு கார்த்தி கேட்கிறான்.
"அ.. அந்த ப்ரீத்தி.. அன்னைக்கு கம்பெனிக்கு வந்தா.."
"அவ எதுக்குடா வந்தா.. அவளுக்கு இன்னும் யார் உயிர் வேணுமாம்.."
"அவ மேல உள்ள கோபத்தை.. சக்தி மேல காட்டிட்டேன்.. சக்தியை ரெஸ்டாரண்ட்ல ஒருத்தன் லவ் சொல்லும் போது தான் பார்த்தேன்.. அதுல அவ மேல எந்த தப்பும் இல்லை.. ஆனா அத மனசில வச்சிட்டு அவள தப்பா பேசிட்டேன் டா.."னு அர்ஜூன் சொல்றான்..
"டேய் என்னடா பண்ணி வச்சிருக்க.. சரி வா வீட்டுக்கு போகலாம்.. சக்தி அப்பவே போன் பண்ணா.."னு கார்த்தி சொல்றான்.
"சக்தி என்னை மன்னிப்பாளா டா.."னு அர்ஜூன் கேட்கிறான்.
"சக்தி புரிஞ்சிப்பா டா.. வா போகலாம்.."னு கார்த்தி சொல்றான்.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..