"பாரதியார் தெருவில யார் வீட்டுக்கு போறீங்க.."னு சக்தி ஸ்கூட்டில போகும் போது நிரஞ்சன் கிட்ட கேட்கிறா.
"சுந்தரம்.."
"சுந்தரமா.."
"ம்.. ஆமா.."னு நிரஞ்சன் சொல்லிட்டு இருக்கும் போது சக்திக்கு கால் வருது.
சக்தி வண்டியை நிறுத்திட்டு.. நிவேதாவோட callஐ அட்டெண் பண்றா.
"சொல்லுங்க டீச்சர்.."
"சக்தி எனக்கு அந்த தள்ளுவண்டி கடையில போளி வாங்கிட்டு வாயேன்.."
"போடி.. நான் அந்தக் கடையெல்லாம் தாண்டி வந்துட்டேன்.. என்னால முடியாது.."
"சக்தி ப்ளீஸ் டீ.. வாங்கிட்டு வா.."
"போடி.. நல்லா அலைய விடு.. வாங்கிட்டு வர்ர்றேன்.. எனக்கு வேணும் அதனால.."னு சொல்லிட்டு சக்தி போனை கட் பண்றா.
நிரஞ்சன் அவளை ஷாக்கா பார்க்கிறான்.
"ஏங்க அப்டி பார்க்கிறீங்க.. சீக்கிரமா போனை கட் பண்ணிட்டேன்னா.."னு சக்தி கேட்கிறா.
"இல்லை.. டீச்சர்னு சொன்னீங்க.. கொஞ்ச நேரத்துல போடி.. வாடி..னு சொல்றீங்க.. அதான்.."னு நிரஞ்சன் சொல்றான்.
"ஓ.. என் சிஸ்டர் தான்.."
"ஓ.."
"பக்கத்துல ஒரு கடை வரைக்கும் போகணும்.. நீங்களும் கூட வர்றீங்களா.."னு சக்தி கேட்கிறா.
நிரஞ்சன் யோசிக்கிறான். சக்தி.. "பரவாயில்லை வாங்க.. நீங்க போக வேண்டிய இடத்துக்கு நானே கொண்டு விட்டுறேன்.. போளி வாங்கித் தர்றேன்.. வாங்க.."னு சொல்றா.
அவ பண்றதை பார்த்து நிரஞ்சனுக்கு சிரிப்பா வருது.
அந்தக் கடைக்குப் போனதும் "அண்ணா இரண்டு போளி இப்ப சாப்பிட.. நாலு பார்சல் பண்ணிடுங்க.."னு சக்தி சொல்றா.
சூடா போளி வந்ததும் சாப்பிட்டுட்டே சக்தி நிரஞ்சன் கிட்ட "எதுக்கு இங்க வந்துருக்கீங்க..னு நீங்க சொல்லவே இல்லையே.."னு கேட்கிறா.
"இங்க தான் எனக்கு பொண்ணு பாத்திருக்காங்க.. அந்தப் பொண்ணு வீட்டுக்கு தான் போறேன்.."னு நிரஞ்சன் சொல்றான்.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..