சக்தி வீட்டில எல்லோரோடயும் பேசிட்டு இருந்துட்டு சாப்பிட்டு முடிச்சதும் படுக்க போறா.
தன்னோட போனை எடுத்து facebook open பண்றா. சக்திக்கு கவிதை எழுதவும் வாசிக்கவும் பிடிக்கும்.
ப்ரெண்ட்ஸோட போஸ்ட் லாம் பார்த்துட்டே வர்றா.
அப்ப ஒரு கவிதையை பார்க்கிறா. அது அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.
Profile open பண்றா. பேர் உதய்.. அதை தவிர வேற எந்த டீடெய்ல்ஸ்ம் இல்லை.. ஒவ்வொரு கவிதையா வாசிக்கிறா. ரொம்ப பிடிச்சிருக்கு.
Super, nice one.. அப்டினு கமெண்ட் போட்டுட்டே வர்றா.
திடீர்னு ஒரு நோட்டிபிகேஷன்..
"Are u stupid.. எதுக்கு இப்டி எல்லா போஸ்ட்க்கும் கமெண்ட் போடுற.."னு அவளோட கமெண்ட்க்கு உதய் பதில் போட்டிருந்தான்.
"சக்தி நீ ஏன்தான் இப்டி லூசுகிட்டயே போய் மாட்டுற.. அவன் என்னடானா என்னனே தெரியாம உளறிட்டு நக்கலா சிரிச்சிட்டு போறான்.. இவன் என்னடானா கமெண்ட் போட்டதுக்கு.. stupidனு சொல்றான்.. ஓ மை காட் சக்தி ரொம்ப பாவம்.."னு சக்தி தன்கிட்டயே பேசிட்டு இருக்கா.
Sry.. அப்டினு உதய் போட்ட கமெண்ட்க்கு பதில் போட்டுட்டு messengerல தன் ப்ரெண்ட்ஸ் கூட பேசிட்டு இருக்கா.
கொஞ்ச நேரம் கழிச்சு அவளுக்கு ஒரு நோட்டிபிகேஷன் வருது.. உதய் சக்தியோட கவிதைக்கு superனு கமெண்ட் போட்டிருந்தான்.
சக்திக்கு சிரிப்பு வந்தது.. அதை பார்த்ததும்.. "Are u stupid.."னு சக்தி reply பண்றா.
"Hy sry.."னு உதய் கிட்ட இருந்து பதில் வருது.
"ம்.. அது.. கடவுள் இருக்கான் சக்தி.."னு சொல்லிட்டு சிரிச்சிட்டே என்ன ரிப்ளை பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கா.
அப்ப சக்தியோட ப்ரெண்ட் மதி போன் பண்றா.
அப்புறமென்ன.. நேரம் போறதே தெரியாம இரண்டு பேரும் போன் சூடாகிற அளவுக்கு பேசிட்டே இருக்காங்க.
சக்தியோட போன்ல பேட்டரி லோனு அலர்ட் சவுண்ட் வருது. அதைக்கூட கவனிக்காம மதிகூட பேசிட்டு இருக்கா சக்தி.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..