சக்தி வேலை முடிச்சிட்டு வீட்டுக்கு வரும்போது இந்திரா மேடம் கார் வீட்டு முன்னால நிக்குது.
சக்தி குழப்பத்தோட வீட்டுக்குள்ள வர்றா.
இந்திரா சக்தியை தன் பக்கத்தில உட்கார வச்சுக்கிறாங்க.
"அம்மு.. உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.."னு கொஞ்சம் யோசிச்சு யோசிச்சு இந்திரா பேசுறாங்க.
சக்தி.. என்ன சொல்ல வர்றாங்கனு புரியாம பார்க்கிறா.
"என் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு.. எனக்கு பொண்ணா என் வீட்டுக்கு வந்துடேன்.."னு இந்திரா சொல்லி முடிக்கவும் சக்திக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு.
இந்திரா பதில் எதிர்பார்த்து சக்தி முகத்தை பார்க்க.. சக்தி என்ன பதில் சொல்றதுனு தெரியாம சுந்தரம் கீதா முகத்தை பார்க்கிறா.
அவங்களுக்கு இதில விருப்பம்னு அவங்க முகம் சொல்லுது. ஆனா சக்திக்கு குழப்பமா இருக்கு.
இந்திரா.. "அப்பாவும் அம்மாவும் உன் முடிவு தான் அவங்களோடதும்னு சொல்லிட்டாங்க.. நீ சொல்லு.."னு குழந்தை மாதிரி சக்திகிட்ட பேசுறாங்க.
சக்திக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை.
சரவணன்.. "இந்து மா.. அவ இன்னும் அர்ஜீனை பார்த்தது கூட இல்லை.. உடனே சொல்லுன்னா அவ எப்டி சொல்லுவா.."னு சொல்றார்.
இந்திரா தன் நாக்கை கடிச்சபடி.. "ஆமால்ல.. சரி.. சரி.. இப்ப என்ன பண்ணலாம்.."னு கேட்கிறாங்க.
சரவணன் தன் போன்ல இருந்து சக்தியோட WhatsAppக்கு அர்ஜீனோட போட்டோவை அனுப்பிட்டு.. "whatsappல அர்ஜீன் போட்டோ அனுப்பிருக்கேன்.. பாருமா.."னு சொல்றார்.
சக்தி போனை கையிலே வச்சிட்டு தயங்குறா.
இந்திரா.."பாரு அம்மு.. பார்த்துட்டு சொல்லு.."னு சொல்றாங்க.
இந்திரா சக்திகிட்ட இருந்து என்ன முடிவு எதிர்பார்க்கிறாங்கனு சக்திக்கு புரியுது.. ஆனா சக்திக்கு யோசிக்க டைம் வேணும்னு தோணுது..
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..