நிச்சயதார்த்தம் சிம்பிளா நடந்த மாதிரி கல்யாணமும் சிம்பிளா நடந்தா நல்லா இருக்கும்னு சக்தியும் அர்ஜீனும் மனசில நினைக்கிறாங்க.
ஆனா எல்லாமே அவங்க நினைக்கிறதுக்கு எதிரா நடக்குது.
இந்திரா குருப் ஆப் கம்பெனிஸ் எம்.டி கல்யாணம் சாதாரணமாகவா நடக்கும்..
இன்விட்டேஷன் இரண்டு வீட்டுக்கும் பொதுவா ப்ரிண்ட் பண்றாங்க..
சக்திக்கு ப்ரெண்ட்ஸ் யாரையும் கூப்பிடணும்னே தோணலை. ஆனா எல்லாரையும் சுந்தரத்துக்கு தெரியுங்கிறதால.. எல்லாரையும் இன்வைட் பண்ணிட்டாங்க.
கல்யாணத்துக்கு எல்லாருக்கும் டிரெஸ் செலக்ட் பண்ண ரொம்ப பிரபலமான கடைக்கு போறாங்க.
இந்திரா சக்திகிட்ட "அம்மு உனக்கு பிடிச்ச டிசைன் செலக்ட் பண்ணு.."னு சொல்றாங்க.
சக்தி சரினு தலையாட்டுறா.
அர்ஜீன் "அம்மா இவளை ஏன் அம்முனு கூப்பிடுறாங்க.."னு முறைச்சிட்டு நிக்கிறான்.
"அர்ஜீன் நீயும் பாரு.. சக்திக்கு எது நல்லா இருக்கும்னு சொல்லு.."னு இந்திரா சொல்றாங்க.
அர்ஜீன் வேற வழி இல்லாம தலையாட்டுறான்.
எல்லாமே விலை அதிகமா இருக்கு. சக்தி பார்த்து பார்த்து செலவு பண்ற டைப்.. அதனால என்ன பண்றதுனு புரியலை. வெறுமனே பார்த்துட்டே நிக்கிறா.
"அம்மு.. என்னாச்சு.. பிடிக்கலையா உனக்கு எதுவும்.."னு இந்திரா கேட்கிறாங்க.
"அது.. அது.. எல்லாமே ரொம்ப காஸ்ட்லியா இருக்கு.."னு சக்தி சொல்றா.
"அதெல்லாம் நீ யோசிக்காத.. உனக்கு எது பிடிச்சிருக்கு னு மட்டும் சொல்லு.."னு இந்திரா சொல்றாங்க.
சக்தி சரினு தலையாட்டுறா.
அர்ஜீன் அவனுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி நின்னுட்டு இருக்கான்.
இந்திரா.. "அர்ஜீன்.. நீயும் வந்து அம்முவுக்கு ஹெல்ப் பண்ணு.."னு சொல்றாங்க.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..