சக்தியும் அர்ஜூனும் கம்பெனில இருந்து வரும் போது.. சுந்தரமும் கீதாவும் அர்ஜூனோட வீட்டுக்கு வந்துருக்காங்க.
சக்தி அவங்கள பார்த்ததும் சந்தோஷமா போய் பேசுறா..
"ம்மா.. ப்பா.. எப்ப வந்தீங்க.."
"இப்ப தான்டா வந்தோம்.."னு கீதா சொல்றாங்க.
அர்ஜூனும் அவங்ககிட்ட பேசுறான்.. இந்திராவும் சரவணனும் வந்ததும்.. சுந்தரம்.. "சக்தியையும் மாப்பிள்ளையையும் மறுவீட்டுக்கு அழைச்சிட்டு போறதுக்காக வந்தோம்.."னு சொல்றார்.
"தாராளமா கூட்டிட்டுப் போங்க.."னு இந்திராவும் சரவணனும் சொல்றாங்க.
கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்துட்டு.. அர்ஜூனும் சக்தியும் சக்தியோட வீட்டுக்கு கிளம்புறாங்க..
"நிவி எங்க.. உங்களோடவும் வரலை.. வீட்டிலயும் இல்லை.."னு வீட்டுக்கு வந்ததும் சக்தி கேட்கிறா.
அப்ப நிவேதாவும் நிரஞ்சனும் வீட்டுக்கு வர்றாங்க. எல்லாருக்கும் ஸ்வீட் கொடுக்கிறாங்க.
"எதுக்கு ஸ்வீட்.."னு அர்ஜூன் கேட்கிறான்.
"நிவேதா கர்ப்பமா இருக்கா.. இப்ப தான் டாக்டர் கிட்ட போய் கன்பார்ம் பண்ணிட்டு வர்றோம்.."னு நிரஞ்சன் சொல்றான்.
எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. நிரஞ்சனும் நிவேதாவும் நாளைக்கு ஊருக்கு கிளம்புறோம்னு சொல்றாங்க.
கீதா "இன்னும் இரண்டு நாளாவது இருந்துட்டு போகலாம்.."னு சொல்றாங்க.
நிவேதா.. "இல்லை மா.. அத்தை மாமாகிட்ட லாம் சொல்லணும்ல.. அப்புறமா லீவு கிடைக்கும் போது வர்றேன்.."னு சொல்றா.
கீதா.. "சரி டா.. இப்ப சாப்பிட என்ன வேணும்னு சொல்லு.."னு கேட்கிறாங்க.
"கீதா.. இதெல்லாம் சரியில்லை.. நான் ஒருத்தி இங்க இருக்கேன்.. அது நியாபகம் இருக்கட்டும்.."னு சக்தி சொல்றா.
"நீ இன்னும் ஒரு வாரம் இங்க தான இருக்குப்போற.. அப்புறமென்ன.."னு நிவேதா சொல்றா.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..