அர்ஜூன் சக்தியை பார்த்து.. "என்ன அம்மு கையை வெட்டிக்கலையா.."னு கேட்கிறான்.
சக்தி கண்டுபிடிச்சிட்டானோ.. என்ன பதில் சொல்றது..னு திருதிருனு முழிக்கிறா..
"எ.. என்னது.."னு எதுவுமே தெரியாத மாதிரி கேட்கிறா.
"கத்தி லாம் பக்கத்தில வச்சிருக்க.. எதுக்கு.. கையை வெட்டிக்குறதுக்கா.."னு அர்ஜூன் கேட்கிறான்.
சக்தி.. அர்ஜூன் இன்னும் கண்டுபிடிக்கலைனு நினைச்சுக்கிறா.
"கையை எதுக்கு வெட்டிக்கப் போறேன்.."னு சக்தி முறைச்சிட்டே சொல்றா.
"அப்டியா.. வேற எதுக்கு.."னு அர்ஜூன் அப்பாவி மாதிரி கேட்கிறான்.
"ஆங்.. அது அது.. ஆங்.. ஆப்பிள் ஆப்பிள் வெட்டுறதுக்கு.."னு சக்தி சொல்றா.
அர்ஜூன் சோபால உட்கார்ந்துட்டு.. சக்தியை பார்த்து.. "ம்.. வெட்டு.."னு சொல்றான்.
சக்தி என்ன எதை வெட்ட சொல்றான் னு முழிக்கிறா.
"என்ன அம்மு பார்க்கிற.. ஆப்பிளை வெட்டு.."னு அர்ஜூன் சொல்றான்.
"ஓ.. ஆப்பிளையா.."னு சொல்லிட்டு சக்தி ஆப்பிள் கட் பண்றா.
அர்ஜூன் சக்தி அனுப்பின போட்டோவை பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்டான்..
"என்ன இது.. வளையல் நான் சக்திக்கு இன்னைக்கு வாங்கினது மாதிரி இருக்கு.. அப்ப சக்தி தான் அம்முவா.."னு யோசிக்கிறான்.
ரூம்ல இருந்து வெளியே வந்து அர்ஜூன் சக்தியை பார்க்க.. சக்தி மெசேஜ் டைப் பண்ணிட்டு இருக்கா.
சந்தோஷத்துல அப்டியே சக்தியை கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ணனும் போல இருந்துச்சு அர்ஜூனுக்கு.
ஆனா.. சக்தி கிட்ட கண்டுபிடிச்சதை காட்டிக்க வேண்டாம்னு அர்ஜூனும் விளையாடுறான்.
"அம்மு உன் விளையாட்டெல்லாம் என்கிட்ட காட்றீயா.. உன் கையை போட்டோ எடுக்கும்போது நான் வாங்கிக் கொடுத்த வளையலை மறைக்கணும்னு மறந்துட்டீயே.. ஆனா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.."னு அர்ஜூன் மனசுக்குள்ள நினைக்கிறான்.
YOU ARE READING
அடியே.. அழகே..
General Fictionமணவாழ்க்கை குறித்த தன் கனவுகளை தொலைத்ததாக எண்ணுகிறாள்.. உண்மையிலே தொலைத்து விட்டாளா.. ஒரு சில பெண்களால் எல்லாரையும் தவறாக எண்ணுகிறான்.. அவள் அப்படியில்லை என உணர்வானா..