சுபம்..80... part (2) உள்ளது

263 44 30
                                    

🔱யின்

❤காதல்🔱சித்திரம்❤

❤சித்திரம் 8️⃣0️⃣

🌹ஒரு மாதம் கடந்த நிலையில் விக்ரம ராஜ கதிரவனின் பூர்வீக வீட்டில் .....
வீடு முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு வாசலில் உதயாவின் அம்மா தேன்மொழியும் ருஷிக்காவின் தாய் தந்தையரும் நின்று இருந்து வீட்டுக்கு வருவோரை வரவேற்க ..........
மறுபக்கம் உதயாவுகும் விக்ராவுகும் தாய் மாமனாகவும்..இந்த வீட்டின் பிள்ளையாகவும் யோகி பாபு சிரித்த முகத்துடன் அமர்ந்து இருக்க..... அவர் அருகில் விக்ராவின் அக்கா dr. அனிதா நின்று இருந்து வருபவர்களுக்கு சந்தனம் கற்கண்டு தந்து பன்னீர் தெளிக்க... பூர்வீக வீடு கல்யாண களைகட்டி இருந்தது....🌹

வேதநாயகி : டிரைவர் பையா...என்ன மச மசன்னு நிக்குற போ போயி வேலைய பாரு....

தேவி : பாட்டி ஆயிரம் தான் இருந்தாலும் அவர் இந்த வீட்டின் சம்மந்தி அவரைக் கொஞ்சம் மரியாதையா பேசு...

வேதநாயகி : 10 ஆயிரம் தான் இருந்தாலும் முதல்ல அவன் எனக்கு பையன்... அதுக்கப்புறம் தான் இந்த வீட்டு சம்பந்தி....

லக்ஷ்மி : பாட்டி அஷ்ரமதில் இருக்குற எல்லோரும் வந்து இருக்காங்க....விக்ரா விக்ராந்த் உதயான்னு யாரையும் காணோமே எங்க போனாங்க...

தேவி : எய் கங்கா எங்கடி உதயா...

கங்கா : அதோ உதயா அண்ணா.....

உதயா : என்ன கங்கா....

யமுனா : அண்ணா இந்த வெட்டி சட்டையில் நீங்க மாப்பிள்ளை மாதிரி இருக்கீங்க....

யாழினி : என் உதயா மாமா எப்பவும் மாப்பிளை தான்...

உதயா : எய் என்ன கூப்பிட்டு வைத்து களாய்க்கிரிங்களா...

யாழினி : இப்போவவது கண்டு பிடிசியே... போ போய்
உன் ஆளு கிளம்பிட்டாளான்னு பாரு....

உதயா : அதெல்லாம் அவளை அவுங்க அக்காங்க அலங்கார படுத்துறாங்க.. நீ போய் பாயசம் குடி போ....

யாழினி : அட போ மாமா உன்னை தான் உன் சின்ன மயில் தேடும்...

வேத நாயகி : எய் உதயா போடா என் மயில் கிளம்பிட்டாளான்னு பாரு..

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now