🔱யின்
K❤காதல் சித்திரம்❤C
(03/06/21)❤சித்திரம்.. 6️⃣
🌹கதிர் முல்லையின் வீட்டில்..... அவள் அருகில் சென்றவன் தன் இரு கரங்களால் முல்லையின் இடுப்பை சுற்றி வளைக்க...முல்லையின் இதயத்தில் பழைய நினைவுகளை மீண்டும் தட்டி எழுப்பிய கதிரின் கரங்களை உணர்ந்த முல்லை... கதிரின் விழிகளை மீண்டும் நோக்கியவள் அவனிடம்🌹
முல்லை : நீ..... நீ....நீங்க என் விகரம ராஜ கதிரவன்.....
கதிர் : ஆமாடி மூணு வருஷத்துக்கு முன்னாடி இந்த வேதா ராணி முல்லைய சசுயம்வரம் பண்ணி... என் இதய கோட்டைக்கு ராணியாக்க துடித்த உன் விக்ரம ராஜ கதிரவன் நான்தான்... இந்த தாடிக்கு பின் இருக்கும் காரணமும் நீ தான்.....என்னடி என்னை மறந்துட்டியா
முல்லை : நீ.......... நீ...........நீங்க எப்படி இங்க........
கதிர் : மூணு வருஷத்துக்கு முன்னாடி அந்த இருட்டுல உன்னுடைய காதலை எனக்குத் தெரியப் படுத்திய அடுத்த நொடி என் கையில இருந்து தொலைந்த பட்டாம்பூச்சி மாதிரி எங்கேயோ பறந்து போயிட்ட இல்ல ..
🌹 என்று கதிர் சொன்னவுடன் மூன்று வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவத்தை யோசித்துப் பார்த்தவளின் மனதில் சந்தோஷத்திற்கு பதில் கோபம் வந்து...அவன் கையை சட்டென்று உதறிவிட்டு..... 🌹
முல்லை : இங்க பாரு நீ....... நீ........ நீ
ஒரு குச்சி மிட்டாயா என் மனசுல இருக்கும் அளவுக்குக் கூட... விக்ரம ராஜ கதிரவனா நிக்கல....உன்னால தான் எ..... எ..... எனக்கு இந்த நிலைமை........ அன்னைக்கு நீ மட்டும் அந்தக் கல்யாணத்தை நிறுத்தாமல் இருந்திருந்தா இன்னைக்கு நானும் என் தங்கச்சியும் இப்படி ஊர் ஊரா அனாதையா சுத்திகிட்டு இருந்துயிருக்க மாட்டோம்..கதிர் : முல்லை என்ன பேச்சு பேசுற... நான் என்ன பன்னேன்
முல்லை : போதும் நிறுத்து.... உன் கண்ண மட்டும் பார்த்து என் மனசுல ஆசை கொண்ட நான்.....உன்னுடைய சுயரூபத்தை பத்தி தெரிஞ்சுக்காம விட்டுட்டேன்.........எனக்கு உன்ன பாக்கவே பிடிக்கல..... இருட்டில் நீ சொன்ன எல்லா விஷயத்தையும் நான் நம்பினேன்.....ஆனா வெளிச்சம் வந்ததுக்கப்புறம் நான் உன்னுடைய உருவத்தை பாக்கலனாலும்..நீ எப்படிப்பட்டவன் என்று கல்யாணத்துக்கு முன்னாடியே அந்த கடவுள் எனக்கு உணர்த்தியதுக்கு நான் இப்ப அவருக்கு நன்றி சொல்றேன் உ .....உ.....உன்ன பார்க்கவே எனக்கு பிடிக்கல....
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏